Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. கதையில் அதிரடி மாற்றம்.. எதிர்பார்க்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றான நீ நான் காதல் சீரியல் திடீரென முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்போது கதையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சீரியலுக்கு பெயர் வாங்க போட்டியாக பல சேனல்கள் புதியது புதியதாக சீரியல் ஒளிபரப்பு செய்து வருகிறது. அதிலும் இளைஞர்களையும் கவரும் வகையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவி பிரபலங்கள் பல இளம் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

Vijay TV Serial Actress

இவருக்கு பதில் இவர்

விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் டப்பிங் சீரியல்கள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன. இப்போது தமிழிலேயே பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பாக்கியலட்சுமி சீரியல், சிறகடிக்க ஆசை சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், சின்ன மருமகள், அய்யனார் துணை போன்ற பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.

அடுத்தடுத்து விலகல்

அந்த வரிசையில் நீ நான் காதல் எனும் சீரியலும் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கிறது. இந்த சீரியல் தான் இப்போது திடீரென்று முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் ஏற்கனவே அனு கேரக்டரில் நடிகை சாய் காயத்ரி நடித்து வந்தார் ஆனால் திடீரென்று அவர் சீரியலில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகிணியாக நடித்து வந்த நடிகை அர்ஷிதா நடித்து வந்தார்.

Vijay TV Serial Actress

சூப்பர் ப்ரோமோ

ஆனால் இப்போது அர்ஷிதா திடீரென்று விலகி விட்டார். மீண்டும் நடிகை சாய் காயத்ரி அனு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இது சீரியலிலும் முக்கிய திருப்பங்கள் வந்திருக்கிறது. அதாவது அபி இடம் ராகம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் ப்ரோமோ நேற்று தான் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் அதிகமான பேசப்பட்டு வரும் நிலையில் இப்போது இந்த சீரியல் முடிவு குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Vijay TV Serial Actress

அபியை புரிந்து கொள்ளும் ராகவ்

அபி மற்றும் ராகவ் காண்ட்ராக்ட் திருமணம் செய்திருந்தனர். அது போல அபி பற்றி ராகவ் தவறாகவே நினைத்துக் கொண்டிருந்தார். அபி மீது தனக்கு காதல் இருந்தாலும் அபிக்கு தன்னுடைய அக்கா கணவர் முரளிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று ராகவ் சத்தேகப்பட்டு கொண்டு இருந்தார் இப்போதுதான் அது தவறு என்று ராகவ் புரிந்திருக்கிறார்.

கதையில் மாற்றம்

இந்த சீரியல் ஆரம்பத்தில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது இப்போது சில மாதங்களாக தான் ஆறு மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது 6:00 மணிக்கு ஒளிபரப்பு செய்ய தொடங்கியதும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது டிஆர்பியிலும் நல்ல இடத்தை பிடித்திருந்தது. ஆனால் சில வாரங்களாக இந்த சீரியலில் டிஆர்பி குறைந்தது.

Vijay TV Serial Actress

சீரியல் முடிவு

அதனால் கதையிலும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறார்கள். முரளி பற்றிய உண்மைகள் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து தெரிய வந்து கொண்டிருக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் இந்த மாத கடைசியோடு சூட்டிங் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் புதிய சீரியல் இந்த டைமில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+