நீயா நானாவில் கோபிநாத் கேட்ட வார்த்தை கதறி அழுத பெண்.. பாசத்தால் வந்த வைராக்கியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மே 21ஆம் தேதிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் மாறுபட்ட குடும்ப பின்னணியில் திருமணம் செய்து கொண்ட அக்கா மற்றும் தங்கைகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு தங்கை தன்னுடைய அக்காவின் குழந்தைகளுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பிசினஸ் செய்வதற்கு ஆசைப்படுகிறேன் என்று கூறி கண்கலங்கி அழுது இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மே 21ஆம் தேதி கான எபிசோட் காண ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் அதில் கோபிநாத் கேட்ட கேள்வியால் ஒரு பெண் கண்கலங்கி அழுது இருக்கிறார். அரங்கத்தில் அதனால் நிசப்தம் நிலவி இருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியில் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து இரண்டு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட இந்த வாரத்தில் ஒரே வீட்டில் பிறந்த அக்கா தங்கைகள் மாறுபட்ட குடும்ப பின்னணியில் திருமணம் செய்து கொண்டு அவர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் சந்தோஷங்கள் குறித்து பேசப்படுகிறது.

அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தங்கைகள் முதல் பிரமோவில் பேசியிருக்கின்றனர். அதில் அக்கா வந்தா என் குழந்தைக்கு கொம்பு முளைத்து விடும் அவ்வளவு சேட்டை பண்ணுவாங்க என்று கூறிக் கொண்டிருக்க, அப்போது அவருடைய அக்கா கல்யாணம் எனக்குத்தான் முதலில் ஆச்சி ஆனா எனக்குப் பிறகு கல்யாணமான என்னுடைய தங்கச்சிக்கு முதலில் குழந்தை பிறந்தது.

அதனால எங்க வீட்டில் பஸ்ட் குழந்தை என்கிறதால அந்த குழந்தை மேல எனக்கு ரொம்ப பாசம் சார் என்று அவர் சொல்ல அதற்கு அவருடைய தங்கை சில நேரம் எனக்கு எங்க அக்கா பசங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க முடியலையே என்று வருத்தமா இருக்கு சார் என்று சொல்ல அதற்கு கோபிநாத் இது அழகா இருக்கா அல்லது நெருக்கடியா இருக்கா என்று கேட்கிறார்.
அதற்கு அவருடைய தங்கை சில விஷயங்களில் நெருக்கடியாதான் இருக்கு. எங்க அக்கா குழந்தைகளுக்கு பண்ணனும் என்பதற்காகவே நான் பிசினஸ் பண்ணனும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன் என்று கண் கலங்கி அழுகிறார். தற்போது இந்த பிரமோ பல்வேறு கருத்துகளை பற்றி வருகிறது.












Click it and Unblock the Notifications