Pa. Ranjith: அடக்குமுறை! விஜய் டிவியில் நடந்த சம்பவம்! சூப்பர் சிங்கர் சரண் பற்றி பா ரஞ்சித் பேச்சு
சென்னை: இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சரண் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார் தற்போது பல டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பா ரஞ்சித் பேசியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் சமூக அரசியலை மையமாகக் கொண்டு தனித்துவமான திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் பா. ரஞ்சித். 'அட்டகத்தி' மூலம் அறிமுகமான இவர், 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற படங்களின் மூலம் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை நேரடியாக பேசும் இயக்குநராக அடையாளம் பெற்றுள்ளார். திரை உலகத்தில் மட்டுமல்லாமல், பொது மேடைகளிலும் சமூக அநீதி, சாதி ஒடுக்குமுறை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருபவர் பா. ரஞ்சித்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாடல் போட்டி நிகழ்ச்சியான 'சூப்பர் சிங்கர்' குறித்து முக்கியமான கருத்துகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் சரண் என்ற இளைஞரை எடுத்துக்காட்டாக கொண்டு, ஊடகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி பேசினார்.
பா. ரஞ்சித் பேசும்போது,"சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வந்த சரண் தம்பி, தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த சமூக அடையாளத்தின் காரணமாக பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்து, கடுமையாக போராடி இந்த நிலைக்கு வந்ததாக வெளிப்படையாக பேசுகிறார். இதுவே பத்து வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தால், இப்படிப் பேசிய அந்த பகுதியை டிவி நிகழ்ச்சியில் இருந்து வெட்டியிருப்பார்கள்" என்று கூறினார்.
மேலும் அவர், "இன்றைக்கு அந்த நிலை மாறியுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை மேடைகளில் பேசக்கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய மாற்றம். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதால், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சில வணிக ரீதியான பலன்கள் இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமானது, மக்கள் 'இவர் யார்', 'எங்கிருந்து வந்தவர்', 'எப்படிப்பட்ட வாழ்க்கையை கடந்து வந்தவர்' என்பதை அறிந்து கொள்வதே" என ரஞ்சித் விளக்கினார்.
சூப்பர் சிங்கர் சரண் குறித்து பேசும்போது, அவர் தனது பாடல் திறமையால் மட்டுமல்லாமல், தனது வாழ்க்கை போராட்டங்களை நேர்மையாக பகிர்ந்துகொள்வதன் மூலம் பலருக்கு நம்பிக்கையளிக்கும் முகமாக மாறியுள்ளார் எனவும் பா. ரஞ்சித் குறிப்பிட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்களது குரலை வெளிப்படுத்தக் கூடிய மேடைகள் இன்று அதிகரித்து வருவது ஆரோக்கியமான சமூக மாற்றத்தின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications