பா ரஞ்சித் சொன்ன ஒரு வார்த்தை! சப்போர்ட்டுக்கு வந்த இயக்குனர் மோகன் ஜி.. ஓபனா பேசிட்டாரே
சென்னை: தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், இயக்குநர்கள் பா. ரஞ்சித் மற்றும் மோகன் ஜி ஆகியோரின் பெயர்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே பா. ரஞ்சித் கருத்துகளுக்கு எதிராகவே தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த மோகன் ஜி, இப்போது பா ரஞ்சித் கருத்துக்கு ஆதரவாக பதில் அளித்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.

பா ரஞ்சித் பதிவு
சமீபத்தில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாக பா. ரஞ்சித் தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காக போராடிய ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த தேர்தல் முக்கியமானது என்றும், அவரின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த பதிவை தொடர்ந்து, ஒரு நெட்டிசன் விமர்சனமாக கருத்து பதிவு செய்தார். அதில், சமூக நீதி குறித்து பேசும் பா. ரஞ்சித், தற்போது வேறு கூட்டணியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவு தருவது எப்படி என்று மோகன் ஜி யை டேக் செய்து கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலாக மோகன் ஜி போட்ட கமெண்ட் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் மோகன் ஜி பதிவு
அவர் தனது ஸ்டைலில், "நாங்கள் இருவரும் பரம்பரை எதிரிகளா? சிந்தனை ஒரே இடத்தில் சேர்ந்தால் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில் என்ன தவறு?" என்று கேள்வி எழுப்பியதுடன், "அந்த அம்மையார் வெல்லட்டும்... உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்" என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதுவரை பா. ரஞ்சித் கருத்துகளை எதிர்த்து வந்த மோகன் ஜி, இப்போது ஒரே கோணத்தில் பேசுவது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. "இவர்கள் இருவருக்கும் உள்ள சிந்தனை வேறுபாடு என்ன ஆனது?", "இது அரசியல் சூழ்நிலை காரணமா?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
மாற்றம் ஏன்
மேலும், இந்த விவகாரம் சாதாரண கருத்து மோதலாக இல்லாமல், தேர்தல் அரசியலுடன் இணைந்து பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இயக்குநர்கள் போன்ற பிரபலங்கள் அரசியல் கருத்து தெரிவிக்கும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த விவாதம் இன்னும் தீவிரமாகியுள்ளது.
மொத்தத்தில், பா. ரஞ்சித் மற்றும் மோகன் ஜி இடையே உருவான இந்த எதிர்பாராத ஒற்றுமை போன்ற நிலை, தேர்தல் கால அரசியல் பேசுபொருளாக மாறி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications