பா ரஞ்சித் சொன்ன ஒரு வார்த்தை! சப்போர்ட்டுக்கு வந்த இயக்குனர் மோகன் ஜி.. ஓபனா பேசிட்டாரே
சென்னை: தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், இயக்குநர்கள் பா. ரஞ்சித் மற்றும் மோகன் ஜி ஆகியோரின் பெயர்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே பா. ரஞ்சித் கருத்துகளுக்கு எதிராகவே தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த மோகன் ஜி, இப்போது பா ரஞ்சித் கருத்துக்கு ஆதரவாக பதில் அளித்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.

பா ரஞ்சித் பதிவு
சமீபத்தில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாக பா. ரஞ்சித் தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காக போராடிய ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த தேர்தல் முக்கியமானது என்றும், அவரின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த பதிவை தொடர்ந்து, ஒரு நெட்டிசன் விமர்சனமாக கருத்து பதிவு செய்தார். அதில், சமூக நீதி குறித்து பேசும் பா. ரஞ்சித், தற்போது வேறு கூட்டணியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவு தருவது எப்படி என்று மோகன் ஜி யை டேக் செய்து கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலாக மோகன் ஜி போட்ட கமெண்ட் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் மோகன் ஜி பதிவு
அவர் தனது ஸ்டைலில், "நாங்கள் இருவரும் பரம்பரை எதிரிகளா? சிந்தனை ஒரே இடத்தில் சேர்ந்தால் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில் என்ன தவறு?" என்று கேள்வி எழுப்பியதுடன், "அந்த அம்மையார் வெல்லட்டும்... உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்" என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதுவரை பா. ரஞ்சித் கருத்துகளை எதிர்த்து வந்த மோகன் ஜி, இப்போது ஒரே கோணத்தில் பேசுவது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. "இவர்கள் இருவருக்கும் உள்ள சிந்தனை வேறுபாடு என்ன ஆனது?", "இது அரசியல் சூழ்நிலை காரணமா?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
மாற்றம் ஏன்
மேலும், இந்த விவகாரம் சாதாரண கருத்து மோதலாக இல்லாமல், தேர்தல் அரசியலுடன் இணைந்து பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இயக்குநர்கள் போன்ற பிரபலங்கள் அரசியல் கருத்து தெரிவிக்கும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த விவாதம் இன்னும் தீவிரமாகியுள்ளது.
மொத்தத்தில், பா. ரஞ்சித் மற்றும் மோகன் ஜி இடையே உருவான இந்த எதிர்பாராத ஒற்றுமை போன்ற நிலை, தேர்தல் கால அரசியல் பேசுபொருளாக மாறி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications