"ஹேய் நிறுத்துடி..”தனத்தை அவமானம் செய்த ஐஸ்வர்யா... முல்லை உடைத்த உண்மை.. அடுத்த வெளியேற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மார்ச் 23 முதல் 25ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ஜீவா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த பிரமோ வில் கண்ணன் ஐஸ்வர்யா உடன் வெளியேற இருக்கிறார்.

மொத்த பிரச்சனைக்கும் காரணம் கண்ணன் தான் என்று தனமும் மூர்த்தியும் கண்ணனை திட்டுகின்றனர்.

சண்டையால் தொடங்கிய சுவாரசியம்

சண்டையால் தொடங்கிய சுவாரசியம்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்தடுத்து பல எதிர்பாராத திருப்பங்களும் விறுவிறுப்பான கதைக்களங்களும் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே ஒரு சில வாரங்களாக இந்த சீரியல் கதை மோசமாக இருக்கிறது என்றும் கர்ப்ப சீன்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்திருந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்து அடுத்தடுத்து வீட்டை விட்டு பிரிந்து போக இருக்கின்றனர்.

ஜீவாவின் நியாயமான கோபம்

ஜீவாவின் நியாயமான கோபம்

ஏற்கனவே ஜீவா தன்னை பண விஷயத்தில் குடும்பத்தினர் அனைவரும் அவமானப்படுத்தி விட்டார்கள் என்று

அனைவரும் முன்னிலையிலும் தன்னுடைய மனதில் இருந்த மொத்த கவலைகளையும் கேள்விகளையும் கேட்டு இனி நான் உங்களுக்கு தம்பி இல்லை என்று மூர்த்தியிடம் சண்டையிட்டு மண்டபத்தை விட்டு அனைவரையும் வெளியேற்றி இருக்கிறார். இதுவரைக்கும் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்து செயல்களையும் ஜீவாவின் மனதை எந்த அளவிற்கு பாதிப்பு இருந்தது என்பது இப்போதுதான் மொத்த குடும்பத்திற்கும் தெரிந்திருக்கிறது.

கண்ணனை திட்டும் குடும்பம்

கண்ணனை திட்டும் குடும்பம்

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் ஜீவா இவ்வளவு பிரச்சனை பண்ணுவதற்கு காரணம் மொய் விஷயத்தில் கண்ணன் செய்த குழப்பம்தான் என்று கண்ணனை திட்டுகின்றனர். அதில் டேய் உன்னால தான் ஜீவா வீட்டை விட்டு போயிட்டான் என தனம் திட்ட, உடனே கண்ணனின் மனைவியான ஐஸ்வர்யா அக்கா என்ன ஓவரா திட்டறீங்க என கோபமாக பேசுகிறார். இதனை பொறுக்காமல் முல்லை குறுக்கிட்டு நீங்க என்ன நல்லவங்களா? என ஐஸ்வர்யாவிடம் கேட்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அடுத்து யார் வெளியே போறாங்க

அடுத்து யார் வெளியே போறாங்க

பிறகு முல்லை, கண்ணன் 40,000 சம்பளம் வாங்குவதும் உங்களிடம் 17,000 ரூபாய் தான் தருகிறான் என்ற உண்மையையும் தனம் மற்றும் மூர்த்தியிடம் சொல்ல, தனத்திற்கும் மூர்த்திக்கும் இது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அதற்கு ஐஸ்வர்யா மொத்த பணத்தையும் உங்ககிட்ட கொடுத்துட்டு ஒவ்வொன்னுக்கும் உங்ககிட்ட கைகட்டி நிற்கணுமா? இந்த வீட்டில நாங்க நிறைய அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிட்டு கஷ்டப்பட்டு தான் இருக்கோம் மாமா என்று ஐஸ்வர்யா சொல்ல, அப்படி யாரும் இங்க கஷ்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லுகிறார். அதற்கு இந்த வீட்டை விட்டு நான் மட்டும் போகணுமா? இல்லை, நாங்க ரெண்டு பேரும் போகணுமா? என்று மூர்த்தியிடம் கேட்கிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+