பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் பற்றி பழனி சொன்ன விஷயம்! கதறி அழுத செந்தில்.. இனி பாண்டியன் எடுத்த முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 டிசம்பர் 24ஆம் தேதிக்கான எபிசோடில், பழனியை பாண்டியன் குடும்பத்தினர் என்னதான் அசிங்கப்படுத்தி இருந்தாலும் தன்னுடைய மருமகனுக்கு பிரச்சனை என்றதும் பழனி வருத்தப்படுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் ஆரம்பத்தில் காந்திமதி ஸ்டோர்ஸில் தொடங்குகிறது. பழனிவேல் தனது அக்கா குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளை நினைத்து வேதனையில் இருக்கிறார். சோகம் காரணமாக கடையில் கூட இருக்க முடியாத நிலை. இருந்தாலும், கட்டாயமாக கடையில் அமர்ந்திருக்கிறார்.

சுகன்யா மற்றும் குமரவேல், பாண்டியன் குடும்பத்தில் பழனிவேலுக்கு ஏற்பட்ட அவமானங்களை சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு பழனிக்கு பாண்டியன் குடும்பத்தின் மீது கோபம் வருகிற மாதிரி ஏற்றி விடுகின்றனர். ஆனால் பழனி . "அவர்கள் எனக்கு இதற்கு முன்பும் கடுமையாக பேசியிருக்கிறார்கள். அதுக்காக இப்போ பாசமே இல்லன்னு நினைக்க முடியாது. 30 வருடமா அந்த குடும்பத்துல ஒருவனா இருந்திருக்கேன்" என்று சொல்கிறார்.
பின்னர் பழனி சரவணனுக்கு போன் போடுகிறார். சரவணன் போன் எடுக்கவில்லை. சிறிது நேரத்தில் சரவணன் தானே கடைக்கு வந்து பழனிவேலை சந்திக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் அழுகிறார்கள். சரவணன் "மாமா என்னை ஏமாற்றிட்டாங்க" என்று சொல்லி பழனிவேலுவை கட்டிப்பிடித்து அழுகிறார்.
பழனிவேல், குழந்தை விஷயத்தை வைத்து தன்னை ஏமாற்றியது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், தங்கமயில் இப்படிச் செய்வாள் என்று நினைக்கவே இல்லை என்றும் சொல்கிறார். அதற்கு சரவணன், தங்கமயில்தான் முக்கிய குற்றவாளி என்று கூறுகிறார்.
சரவணன், பழனிவேலிடம் மன்னிப்பு கேட்கிறார். இனிமேல் எதுவாக இருந்தாலும் முதலில் உங்களிடமே சொல்கிறேன், நான் உங்களிடம் உண்மையை மறைக்கனும்னு நினைக்கல ஆனால் இந்த உண்மை வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சினையாகும் தான் எத்தனை நாள் மூடி வைத்திருந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், கடையை மூடிய பிறகு இரவில் சந்தித்து பேசலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பின்னர் கடைக்கு வந்த சரவணன், தனது தம்பி கதிரிடம், மாமாவை சந்திக்க ஈவ்னிங் வெளியே போகலாம் என்று சொல்லுகிறார். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடு முடிகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications