பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: லஞ்சம் வாங்கிய செந்தில், மறக்க முடியாத சம்பவம்! பயத்தில் கதிர்.. மீனா கண்டுபிடித்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில், லஞ்சம் வாங்கிய செந்தில் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய மாமனார் மோசமான ஐடியாவை தொடர்ந்து கொடுக்கிறார். மறுபக்கத்தில் ராஜியால் கதிரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 Serial March 11, 2026 episode) செந்தில் அரசு வேலை செய்து கொண்டிருப்பவர். ஆனால் அவர் மிகவும் நேர்மையாக வேலை பார்த்து வருவதால் அவரால் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியவில்லை. இதனால் அவரது மாமனார் அடிக்கடி அவரிடம் "அரசு வேலை பார்த்து முன்னேறணும்னா லஞ்சம் வாங்கணும், இல்லனா எதுவும் நடக்காது" என்று தூண்டி விடுகிறார். ஆரம்பத்தில் செந்தில் அதை ஏற்காமல் இருந்தாலும், தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததால் ஒருகட்டத்தில் அவர் மனம் மாறுகிறது.

அதற்குப் பிறகு தனக்கு தெரிந்த ஒரு நபருக்கு ஒரு டாக்குமெண்டில் சீக்கிரமாக கையெழுத்து வாங்கி கொடுத்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று மாமனார் சொல்லுகிறார். அந்த பேச்சை நம்பி செந்திலும் முதல்முறையாக லஞ்சம் வாங்கி விடுகிறார். இதுவரை நேர்மையாக இருந்த செந்தில் இப்படிச் செய்ததால் அவருக்கே உள்ளுக்குள் மிகவும் பயமாக இருக்கிறது.
லஞ்சம் வாங்கிய பிறகு செந்திலின் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பிக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் பதட்டமாக இருக்கிறார். அப்படியே கலங்கி நின்று கொண்டிருக்கும்போது மீனாவின் அப்பாவிடம் இருந்து அவருக்கு போன் வருகிறது. "எல்லாம் முடிஞ்சிருச்சா? நான் சொல்லி வச்ச ஆள் வந்து பணம் கொடுத்துட்டாரா?" என்று அவர் கேட்கிறார். அதற்கு செந்தில் பணம் வாங்கிய விஷயத்தை சொல்ல, அவர் மிகவும் சந்தோஷப்படுகிறார். ஆனால் அந்த பதற்றம் மட்டும் செந்திலிடம் இருந்து குறையவே இல்லை.
மீனா கேட்ட கேள்வி
அதே பதற்றத்துடன் நடுங்கிக் கொண்டே செந்தில் வீட்டுக்கு திரும்புகிறார். வீட்டுக்கு வந்தவுடன் அவரைப் பார்த்த மீனாவுக்கு ஏதோ சந்தேகம் வருகிறது. "என்னங்க, எதையோ திருடிட்டு வர்ற மாதிரி இப்படி வேர்த்து விறுவிறுத்து வர்றீங்க?" என்று மீனா கேட்கிறார். அதற்கு செந்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல் திணறி நிற்கிறார்.
மாமனார் அட்வைஸ்
அந்த நேரத்தில் மீனாவின் அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்த பிறகு செந்தில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கிறார். அதற்குப் பிறகு மீனாவின் அப்பா செந்திலிடம் "இப்படித்தான் பணம் சம்பாதிக்கணும்" என்று புத்திமதி சொல்ல ஆரம்பிக்கிறார். இதை கேட்கும் போது செந்திலுக்கு உள்ளுக்குள் இன்னும் கலக்கம் தான்.
அது மட்டும் இல்லாமல், மீனாவின் அப்பா தொடர்ந்து செந்திலிடம் "இது போதாது... இன்னும் இப்படித்தான் பணம் சம்பாதிக்கணும்" என்று சொல்லி தொடர்ந்து லஞ்சம் வாங்கச் சொல்லி தூண்டுகிறார். இதனால் செந்தில் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி அடுத்த எபிசோடுகளில் முக்கியமாக இருக்கும் போல தெரிகிறது.
இதற்கிடையில் மற்றொரு பக்கம் ராஜியின் காட்சிகளும் வருகிறது. ராஜி ஐஏஎஸ் தேர்வுக்காக மிகவும் தீவிரமாக படித்து வருகிறார். அதற்காக அவர் இரவு பகலாகவே படிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார். ஆனால் அவருடைய அறையிலேயே கதிர் தூங்கிக் கொண்டிருக்கிறார். கதிரை டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்று நினைத்த ராஜி, ரூம் லைட்டை கூட போடாமல் மொபைல் போனின் வெளிச்சத்தில் தான் படித்து கொண்டு இருக்கிறார்.
பயத்தில் கதிர்
அப்படி இரவு நேரத்தில் மொபைல் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கதிர் தூக்கத்தில் இருந்து எழுந்து கண் திறந்து பார்க்கிறார். இருட்டில் ராஜி நின்றிருப்பதை பார்த்ததும் அவர் பயந்து "அய்யய்யோ பேய்!" என்று கத்தி விடுகிறார்.
அதற்குப் பிறகு ராஜி உடனே லைட்டை போட்டு "நான் தான்... பயப்படாதீங்க" என்று சொல்கிறார். அப்போது தான் கதிருக்கு புரிகிறது. அதற்குப் பிறகு கதிர் ராஜியை பார்த்து, "அடேங்கப்பா... இந்த அளவுக்கு படிக்கிறியா? என்னால உன்னோட படிப்பு கெட்டுப் போகக்கூடாது. நீ லைட்டை போட்டுக்கிட்டு நிம்மதியா படி" என்று சொல்கிறார். அதற்குப் பிறகு ராஜியும் லைட்டை போட்டுக்கொண்டு இரவு முழுவதும் விடிய விடிய படித்துக் கொண்டே இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: பாண்டியன் செய்த செயலால் கதறி அழுத கோமதி.. மயில் அப்பாவுக்கு கிடைத்த ஆதாரம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?













Click it and Unblock the Notifications