பாண்டியன் ஸ்டோர்ஸ்: நல்லது செய்ய போன மீனாவை மாட்டிவிட்ட பாக்கியம்! கோபத்தில் கோமதி சொன்ன வார்த்தை! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக மீனா எடுத்த முயற்சி அவருக்கே பிரச்சனையாக போயிருக்கிறது கடைசியில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

மயிலுடன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம்
இன்றைய எபிசோடில் மீனா, தங்கமயிலுக்கு போன் செய்து கோவிலுக்கு வரச் சொல்கிறார். முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி மயிலை கோவிலுக்கு வரச் சொல்கிறார். அந்த நேரத்தில் பாக்கியம் இந்த விஷயத்தை ஒட்டுக்கேட்டு விடுகிறார்.
அதன்பின்னர் தங்கமயில் கோவிலுக்கு கிளம்பும் போது "நானும் வரேன்" என்று சொல்லி பாக்கியமும் அவருடன் கிளம்புகிறார். மறுபக்கத்தில் மீனா தனது அத்தை கோமதியை கோவிலுக்கு அழைத்து வந்து அவருடன் சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறார். அப்போது கோமதி, "ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே, என்ன விஷயம்?" என்று கேட்கிறார். அதற்கு மீனா "கொஞ்சம் காத்திருங்க" என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு வெளியே செல்கிறார்.
ஷாக் ஆன மீனா
கோவிலுக்கு வெளியே வந்த மீனாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தங்கமயில் தனது அம்மாவான பாக்கியத்தையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்திருப்பதை பார்த்ததும் மீனா ஷாக் ஆகிறார்.
"எதுக்கு மயிலு உங்க அம்மாவை அழைச்சிட்டு வந்த?" என்று மீனா கேட்கிறார். அதற்கு பாக்கியம், "ஏன்? நான் என் பொண்ணோட கோவிலுக்கு சாமி கும்பிட வந்தா உனக்கென்ன?" என்று பதில் கூறுகிறார்.
அதன்பின்னர் வேறு வழியின்றி மீனா போட்டுருக்கும் பிளானை பற்றிய உண்மையை சொல்லிவிடுகிறார். அதைக் கேட்ட பாக்கியம், "நான் வந்து பேசுனா என்ன ஆகிடப்போகுது?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "நீங்க வந்தா பிரச்சனை தான் வரும்" என்று கூறுகிறார்.
சண்டை போடும் கோமதி - பாக்கியம்
அதன்பிறகு தங்கமயில் மீனாவை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் செல்கிறார். அங்கு இருந்த கோமதி, தங்கமயிலை பார்த்ததும் மிகவும் கோபப்படுகிறார். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்கிறார். அதோடு மீனாவையும் அதிகமாக திட்டுகிறார். இவ நமக்கு செஞ்ச துரோகத்தை எல்லாம் நீ மறந்துட்டியா? இவ கூட சுத்திகிட்டு இருக்கிற.. இவ பேச்சைக் கேட்டு நீ என்னை இங்க வர வச்சிருக்க என்று கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியமும் அங்கே வந்துவிடுகிறார்.
அதன்பிறகு கோமதி மற்றும் பாக்கியம் இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட, தங்கமயிலும் மீனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கடைசியாக மீனாதான் உங்ககிட்ட பேசணும்னு சொல்லி எங்கள, வர சொன்னது என்ற உண்மைகளையும் பாக்கியம் சொல்லி விடுகிறார். இதனால் கோமதி கடும் கோபத்தில் நிற்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications