பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடில், பாண்டியன் சரவணனிடம் அஞ்சலி பற்றி கேள்விகளை கேட்க அதற்கு சரவணன் எதிர்பார்க்காத பதிலை சொல்லி இருக்கிறார்கள் இனி பாண்டியன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பாண்டியனும் சரவணனும் கடையை அடைத்து விட்டு இரவு பேசிக்கொண்டே வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது பாண்டியன், "இன்னைக்கு நீ கோவிலுக்கு போய் ஒரு பொண்ணுகூட பேசிக்கிட்டிருந்ததை நானும் பார்த்தேன்" என்று சொல்கிறார்.
அந்தப் பொண்ணு யார்? மயில் வீட்டில் இருந்து வந்து சண்டை போட்ட போது சொன்னாங்களே அதே பெண்ணு தானா என்று கேட்கிறார். இப்போ தான் ஒரு பொண்ணுடன் உனக்கு டைவர்ஸ் ஆகப் போகுது, அதற்குள் இன்னொரு பொண்ணுடன் பேசுவது சரியில்லை என்று சரவணனுக்கு அறிவுரை கூறுகிறார்.
சரவணன் சொன்ன விஷயம்
அதற்கு சரவணன், "நாங்க தப்பா எதுவும் பேசல. அந்தப் பொண்ணும் என்ன மாதிரி டைவர்ஸ் ஆகி, அவங்க அப்பா அம்மா வீட்டில தான் இருக்கிறாங்க. அதனால ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக பேசிக்கறோம், அதுதான். எங்களுக்குள்ள எந்தத் தவறான எண்ணமும் இல்லை" என்று விளக்கம் கொடுக்கிறார்.
ஆனாலும் விடாமல் பாண்டியன் கதிரிடம் நீ காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணுனேன்னு சொன்னியே.. நான் கூட அவங்களுக்கு குடும்பம் எதுவும் இல்லை என்று வேண்டாம்னு சொன்னேனே அந்த பொண்ணு தானே இது என்று கேட்க, அதற்கு சரவணன் ஆமாம், ஆனால் நான் பழைய மாதிரி எந்த ஒரு ஃபீலிங்கிலும் அவளை தேடி போய் பேசல எதார்த்தமா தான் கோவிலில் சந்தித்து பேசினோம் என்று சொல்கிறார்.
மீனாவிடம் சிக்கிய செந்தில்
அடுத்ததாக செந்தில் மாமனாரின் பேச்சைக் கேட்டு அவர் லஞ்சம் வாங்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி வாங்கிய லஞ்சப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து, பீரோவை திறந்து வைக்க முயற்சிக்கிறார். அப்போது மீனா அங்கு வருகிறார். பதட்டத்தில் செந்திலின் கையிலிருந்த பணம் கீழே கட்டுக்கட்டாக விழுகிறது. அதை பார்த்த மீனா, "இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?" என்று கேட்கிறார். அதற்கு செந்தில், "அப்பாவுக்கு கொடுக்க நான் சேமித்து வைத்த பணம் இது, பேங்கில் இருந்து எடுத்தேன்" என்று பொய் சொல்லி மழுப்புகிறார். இருந்தாலும் மீனாவுக்கு சந்தேகம் குறையவில்லை.
ராஜி செய்த செயல்
மறுபுறம் கோமதி வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது ராஜி மட்டும் டயட்டில் இருப்பதால் சாப்பாடு சாப்பிடாமல், வெள்ளரிக்காய் மற்றும் அவித்த முட்டை போன்றவற்றை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த காந்திமதி, "இதெல்லாம் என்ன சாப்பாடு?" என்று கேட்கிறார். அதற்கு ராஜி, "நான் குண்டாக இருக்கிறேன்னு ஒருத்தன் சொன்னான், அதனால தான் உடம்பை குறைக்க டயட் பண்ணுறேன்" என்று சொல்கிறார்.
உடனே "யாரு அவன்?" என்று காந்திமதி கேட்கிறார். அரசி, "காலேஜ்ல யாராவது சொல்லியிருப்பாங்க" என்று சொல்கிறார். காந்திமதி, "யாருன்னு மட்டும் சொல்லு, நான் பாத்துக்கறேன்" என்று கோபமாக பேசுகிறார். ஆனால் அந்த ஆள் கதிர் தான் என்று ராஜி சொல்லாமல் மறைக்கிறார். அப்போது கதிர், "ஒருவேளை இவ ஸ்லிம் ஆகணும்னு நான் டிப்ஸ் கொடுத்திருப்பேன்" என்று சமாளிக்கிறார்.
கடைசியாக, பாண்டியன் தன்னுடைய துணிகளை தானே துவைக்கிறார். ஆனால் எந்த துணியிலும் அழுக்கு போகவில்லை. அப்போது அங்கு வரும் கோமதி, அந்த துணிகளை வாங்கி துவைத்து காயவைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை














Click it and Unblock the Notifications