பாண்டியன் ஸ்டோர்ஸ்: செந்திலுக்காக ரகசியமாக பாண்டியன் செய்த செயல்.. கோமதிக்கு தெரிந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் வேலைக்கு போகும் முதல் நாளில் பாண்டியன் செய்த செயலை பார்த்து கோமதி கண்கலங்கி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கடையில் இருக்கும் பாண்டியன், பழனி மற்றும் சரவணன் கோபமாக திட்டி விட்டு கடையிலிருந்து வெளியில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி விடுகிறார். செந்தில் மற்றும் கதிர் இருவரும் பாண்டியனை பார்க்க கடைக்கு வருகிறார்கள். அப்போது செந்திலிடம் பழனி என்னடா வேலைக்கு போறேன்னு மாறி கடைக்கு வந்துட்டியா என்று கிண்டல் செய்கிறார்.

Pandian Stores Vijay TV

அதற்கு கதிர் நான் வேலைக்கு போறதுக்கு முன்னாடி அண்ணனுக்கு அப்பா கிட்ட சொல்லிட்டு போகணுமா? அதான் வந்திருக்காரு என்று சொன்னதும் அவர் உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தாரு, ஆனால் வேலை இருந்ததால் வர முடியல. இப்ப எங்க போய் இருக்காருன்னு தெரியலையே என்று பழனி சொன்னதும் சரவணன் அப்பா வணிகர் சங்கத்தில் வேலை இருப்பதா போயிருக்காரு என்று சொல்கிறார். ஆனால் பாண்டியன் மாலை வாங்கிக்கொண்டு வந்து சாமிக்கு செந்தில் பெயரில் பூஜை செய்கிறார்.

செந்திலுடைய ராசி நட்சத்திரத்தை சொல்லி பூஜை செய்துவிட்டு செல்ல அதே கோவிலுக்கு கோமதியும் வருகிறார். கோமதியும் அங்கிருந்த ஐயரிடம் செந்தில் பெயர் ராசி நட்சத்திரத்தை சொன்னதும் அதற்கு ஒருவர் அர்ச்சனை பண்ணிட்டு போனாரு என்று சொன்னதும் யார் அவர் என்று கோமதி பார்க்க அவர் பாண்டியனை காட்டுகிறார். செந்திலை வீட்டில் அப்படி திட்டி விட்டு செந்திலுக்காக பாண்டியன் அர்ச்சனை செய்ததால் மகனுக்காக அர்ச்சனை செய்ய வந்தீங்களா? வீட்டில் அவன் வேலைக்கு கிளம்பும்போது இருக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்.

அதற்கு பாண்டியன் ஏன் இப்ப அது ரொம்ப முக்கியமா? என்று கேட்டதும் ஆமா நீங்க இப்படி பண்ணிட்டு இருந்தா அவங்க மேல உங்களுக்கு பாசம் இல்லை என்று நினைக்க போறாங்க என்று சொன்னதும் பாண்டியன் அப்படின்னு நினைச்சா நினைக்கட்டும் நான் அப்பாவா என் கடமை செய்கிறேன் என்று சொல்லி சொல்லிவிட்டு இருவரும் கோவிலை விட்டு கிளம்புகின்றனர்.

பிறகு வரும் வழியில் கோமதி பாண்டி என்னிடம் பேசிக் கொண்டே வருகிறார். முதலில் அவர் கடுப்பானாலும் உன் மேல எனக்கும் பாசம் இருக்கு என்று கூறி சமாளித்து விடுகிறார். பிறகு கதிர் மற்றும் செந்தில் இருவரும் வணிகர் சங்கத்துக்கு போகலாமா என்று கேட்க, கதிர் ஏற்கனவே நேரமாகிடுச்சு இன்னும் வேலையில் சேர லேட் ஆயிடும் என்று ஆபீஸ்க்கு கூட்டி கொண்டு போகிறார்.

அப்போது வரும் வழியில் அரசி செந்திலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு போகிறார். பிறகு கதிர் ஆபீஸில் கொண்டு வந்து விடுகிறார். அங்கு மீனாவும் அவருடைய அப்பாவும் காத்திருக்க, செந்தில் வந்ததும் வேலையில் சேர்வதற்கான முதற்கட்ட வேலை விஷயங்களை முடித்துவிட்டு வருகிறார்கள். பிறகு மீனா மற்றும் செந்தில் சந்தோசமாக போட்டோஸ் எடுத்துக் கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+