முல்லையின் வளைகாப்பில் இப்படி ஆகிவிட்டது..மெயின் வில்லியே இவங்க தான்! தெரிய வந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 18ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து முல்லையின் வளைகாப்பை கொண்டாடுகின்றனர்.
இது கனவா நனவா என்று அந்த ப்ரோமோவில் முடித்திருக்கும் நிலையில் பல எதிர்பார்க்காத உண்மைகள் வெளியே வந்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சில மாதங்களாகவே அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் கூட்டு குடும்பமாக இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பம் இப்போது ஆளாளுக்கு பிரிந்து இருக்கின்றனர். ஜீவா ஒரு பக்கம் மீனா உடன் மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
அதைத்தொடர்ந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனிக்குடித்தனம் போயிருக்கின்றனர். அவர்கள் இதுதான் சுதந்திரமான வாழ்க்கையாக இருக்கிறது என்று என்ஜாய் பண்ணிக் கொண்டே கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் ஐஸ்வர்யா இஎம்ஐயில் பொருட்களை வாங்கி குவித்து கொண்டிருக்க கண்ணன் திணறினாலும் பிறகு எல்லாம் சமாளித்து விடலாம் என்று மெத்தனமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கதிர் எப்படியாவது முல்லையின் வளைகாப்பில் தன்னுடைய அண்ணன் தம்பிகள் எல்லாரும் ஒன்றாக மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்று அண்ணன் தம்பிகள் அனைவருக்கும் ஒரே கலரில் சட்டை எடுத்து தனித்தனியாக அனைவரும் வீட்டிற்கு கொடுத்து இருக்கிறார். அனைவரும் நாளைக்கு வளைகாப்பு பங்ஷனுக்கு வந்துவிடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் கதிர் இருக்கிறார்.
அதே நேரத்தில் மண்டபத்தில் எந்த உதவியும் செய்ய ஆளே இல்லாமல் தன்னுடைய மனைவிக்காக தானே மண்டபத்தை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கண்ணன் ஒரு பக்கம் தன்னுடைய வீட்டை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கண்ணனுக்காக கதிர் வாங்கி கொடுத்த சட்டையை நான் போட விடமாட்டேன் என்று ஐஸ்வர்யா ஏற்கனவே அவருடைய சித்தியிடம் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அனைவரும் ஒரே கலரில் சட்டை போட்டு வந்திருப்பதால் இது கனவாக தான் இருக்குமோ என்று ஒரு பக்கம் எண்ண தோன்றுகிறது. அதே நேரத்தில் மீண்டும் மொத்த குடும்பமும் வந்து சேர்ந்து ஐஸ்வர்யாவால் முல்லையின் வளைகாப்பில் புது பிரச்சனை ஏற்பட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக அடுத்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு போகப் போகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications