ஜெயிலில் இருந்து வரும் கதிர்..மாமியார் கேட்ட கேள்வி.. அவமானப்படுத்தும் மூர்த்தி..திடீர் பிரச்சனை
சென்னை: கதிரை ஜெயிலிலிருந்து வெளியே எடுக்க தனம் தன்னுடைய நகைகளை கொடுத்து உதவுகிறார்.
கதிர் ஜெயிலில் இருந்து வந்ததும் கண்ணனை மூர்த்தி திட்டுகிறார்.
வீட்டிற்கு வந்த கதிருக்கு ஆரத்தி எடுக்கும் போது மீனாவை முல்லையின் அம்மா அவமானப்படுத்துகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 1ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் முல்லை வீட்டில் அழுது கொண்டே இருக்க அவருடைய அப்பா சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். அனைவரும் பணத்திற்கு என்ன செய்வது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
என்னுடைய நகையை எடுத்துக்கோங்க அக்கா என்று முல்லை சொல்ல, அதான் என்னுடைய நகை இருக்குல்ல அதை நான் கொடுக்க மாட்டேன்னா? என்று தனம் சொல்ல, அப்போ மூர்த்தி நான் பாதி பணம் ரெடி பண்ணிட்டேன் என்று சொல்ல, என்னுடைய நகையை வச்சு கதிர சீக்கிரமா கூட்டிட்டு வாங்க என்று தனம் கொடுத்து அனுப்புகிறார்.
பணத்தை ரெடி செய்து மூர்த்தி வக்கீல் இடம் போய் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் பேங்க் ஆபீஸரை பார்ப்பதற்காக போக அவர்கள் பணம் ரெடியா என்று கேட்க, எல்லாம் ரெடியாக இருக்கிறது என்று சொல்கின்றனர். பணத்தை இப்ப கொடுங்க நாளைக்கு காலையில் போய் கேசை வாப்பஸ் பண்ணி வாங்குகிறோம் என்று பேங்க் ஆபீஸர் சொல்ல, மூர்த்தி கோபம் ஆகிறார்.
பிறகு நீங்க சொன்ன மாதிரி நாங்க பணத்தை ரெடி பண்ணிட்டோம். நீங்க தயவு செய்து கேஸை வாபஸ் வாங்குங்க என்று சொல்கின்றனர். அதற்கு பேங்க் ஆபிஸர்ஸ் சரி நீங்க பணத்தை தந்துட்டு போங்க நான் வருகிறேன் என்று அனுப்பி வைக்கிறார். வெளியே வந்ததும் ஜீவா பணத்தை கொண்டு வந்து மூர்த்தியிடம் கொடுக்க நான் பணம் கொடுத்து விட்டேன் என்று மூர்த்தி சொல்கிறார்.
பிறகு அனைவரும் போலீஸ் ஸ்டேஷனில் கேஸை வாபஸ் வாங்குவதாக கூறி கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர். கதிர் ஜெயிலிலிருந்து வெளியே வருகிறார். பிறகு ஜெயில் வாசலில் நின்றபடி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராத்திரிக்குள்ள உன்ன கூட்டிட்டு வரலைன்னா முல்லைக்கு என்ன ஆகி இருக்குமுன்னே தெரியல டா என்று மூர்த்தியும் ஜீவாவும் கதிர் தோளில் சாய்ந்து கொள்கின்றனர். ஜீவா கண்ணன் தனியாக நின்று பீல் பண்ணுவதை பார்த்து அருகில் வர சொல்கிறார்.

பிறகு கண்ணன் கதிரை வந்து கட்டி பிடித்துக் கொள்ள மூர்த்தி கண்ணனை திட்டுகிறார். இவனையும் நான் தானடா வளர்த்தேன். ஆனால் இவன் மட்டும் ஏன்டா இப்படி இருக்கான் என்று கேட்டு, அழுது கொண்டு தனியாக போய்விடுகிறார். பிறகு பிரச்சனை எல்லாம் முடிஞ்சுச்சா அண்ணே என்று கண்ணன் கேட்க, முடிஞ்சு பணம் எல்லாம் கொடுத்து முடிச்சாச்சு என்று சொல்ல, எவ்வளவு பணம் என்று கேட்க ஜீவா 5 லட்சம் பணம் என்று கூறுகிறார்.
அதைக் கேட்டு கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். மூர்த்தி கோபமாக கண்ணனை முறைத்து பார்க்கிறார். அடுத்ததாக அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். மீனா கதிருக்கு ஆரத்தி எடுக்கிறார். அப்போது முல்லையின் அம்மா ஊர் கண்ணு, உறவு கண்ணு, உங்க அப்பா கண்ணு, தனத்தின் அம்மா கண்ணு என எல்லோரும் பற்றியும் சொல்லி சுற்றி போட சொல்கிறார். இதை கேட்டு மீனா கோபம் ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications