கோர்ட்டுக்கு வரும் ஜனார்த்தனன் கேஸ்.. பல்டி அடித்த பிரசாந்த்.. அதிர்ச்சியில் மீனா.. மல்லியின் கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செப்டம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் ஜனார்த்தனனையும் பிரசாந்தையும் தாக்கியது ஜீவா மற்றும் கதிர் தான் என்று பிரசாந்த் பொய் சொல்லுகிறார்.

அதைக் கேட்டு மீனா அதிர்ச்சியாகி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்று எபிசொடின் ஆரம்பத்தில் ஜீவாவும், கதிரும் ஜெயிலுக்குள் இருக்க அப்போது மூர்த்தி நான் உங்களை எப்படியாவது இன்னைக்கு வெளியே எடுத்திருந்தேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். நேரம் ஆக ஆக அங்கு இருக்கும் போலீஸ் ஆபீஸர் மூர்த்தியையும் முல்லையின் அப்பாவையும் வெளியே போக சொல்லி திட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து மீனாவும் கண்ணனும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். அங்கு மீனா தன்னுடைய அம்மாவை பார்த்து கதறி அழுது கொண்டிருக்கிறார். அப்போது மீனாவின் அம்மா பாரு நல்லா பாரு இப்ப அழுது என்ன பிரயோஜனம் இன்னைக்கு உங்க அப்பா உள்ளே சுயநினைவு இல்லாம கிடக்கிறார் என்று சொல்லுகிறார். அதைக் கேட்டு மீனா அழுது கொண்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் கண்ணன் உங்க புருஷனை அண்ணனுங்க தான் ஏதோ பண்ணிட்டாங்கன்னு சொல்லி நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கீங்களா? போலீஸ் அண்ணன்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் இருக்காங்க என்று சொல்ல, அதைக் கேட்டு கோபமான மீனாவின் அம்மா உங்க அண்ணனுங்களால் தான் என் குடும்பத்திற்கு இன்னைக்கு இந்த நிலைமை வந்து இருக்கு என்று திட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து மீனா தன்னுடைய அம்மாவிடம் பிரசாந்த் இப்போ எப்படி இருக்கான் என்று கேட்க, அவரும் அதிகமா வெட்டு வாங்கிகிட்டு தான் இருக்காரு. அந்த கதிருக்கு என்னடி அவ்வளவு இப்படி கோபம். கையில மாட்டுறவங்க எல்லாரையும் வெட்டுற அளவுக்கு என்று திட்ட, அதற்கு கண்ணன் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. அண்ணன் அப்படிப்பட்டவர் இல்லை என்று சொல்ல, அதற்கு மீனாவின் அம்மா மீனா அப்பா என்ன துரோகம் பண்ணினாரு உங்களுக்கு? எல்லாருக்கும் நல்லது தானே பண்ணுனாரு.
உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை எல்லாம் கொடுத்தாரே, அதெல்லாம் மறந்து போச்சா? நீங்க எல்லாரும் நல்லவங்க மாதிரி வேஷம் போட்டு போட்டு எவ்வளவு பெரிய வேலையை பார்த்து வச்சிட்டீங்க. தப்பு பண்ணினவங்க கண்டிப்பா அனுபவிப்பீங்க என்று சாபம் கொடுக்கிறார். அப்போது டாக்டர் வந்து ஜனார்த்தனின் நிலைமை ரொம்பவே மோசமாக தான் இருக்குது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று சொல்ல, இதை கேட்டு மீனாவும் அவருடைய அம்மாவும் அழுது கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் மல்லி அங்கு வந்து மீனாவையும் கண்ணனையும் திட்டுகிறார். ஹாஸ்பிடல் இருக்கிறவங்க உயிரோடு இருக்காங்களா? இல்ல செத்துட்டாங்களான்னு பாத்துட்டு வரச் சொல்லி உங்க அண்ணனுங்க அனுப்பி வச்சிருக்காங்களா? என்று கேட்க அதற்கு கண்ணன் கண்டிப்பா ஏதோ தப்பு நடந்து இருக்கு அதை புரிஞ்சிக்காம இப்படி பேசாதீங்க என்று சொல்ல, அதற்கு மல்லி மீனாவிடம் உன் புருஷனுக்கும் உங்க அப்பாவுக்கு பிரச்சனைனா அதை நீங்க தான் பேசி தீர்த்துக்கணும்.
அதுக்காக இப்படி பண்ணலாமா? ரோட்ல வச்சி கதிர் பிரசாந்த்தை அடிச்சி இருக்கான். பிரசாந்த் தான் ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை வேண்டாம்னு ஒதுங்கி போயிட்டு இருக்கான் ஆனாலும் விடாம எப்பவும் இப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்க. அவன் திமிர வேற யார்கிட்டயும் காட்ட சொல்லு என் பையன் கிட்ட காட்ட சொல்லாத என்று மிரட்டிக விட்டு போகிறார்.

அதைத் தொடர்ந்து மீனாவும் கண்ணனும் வீட்டிற்கு வர அப்போது வீட்டில் யாருமே சாப்பிடாமல் அழுது கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மீனா தனத்திடம் அப்பாவுக்கு இன்னும் நினைவு திரும்பல. அப்பா என் மேல ரொம்ப பாசம் வைத்திருந்தார் என்று சொல்லி அழுது கொண்டே இருக்கிறார். அப்போது தனம் ஆறுதல் சொல்ல அந்த நேரத்தில் மீனா ஜீவா என்று கூப்பிட ஜீவாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணிய விஷயத்தை தனம் நினைவுபடுத்துகிறார்.
பிறகு மீனா தன்னுடைய அப்பா பாசத்தை சொல்லி அழுது கொண்டே இருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் மீனா ஹாஸ்பிடலில் இருக்க அப்போது போலீஸ் ஆபீஸர்ஸ் வந்து இன்னைக்கு உங்க அப்பாவுடைய கேஸ் கோர்ட்டுக்கு வருது என்று சொல்லி ஜனார்த்தனனுக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஆபீஸர் பிரசாந்திடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்தப் பக்கமாக வரும் மீனா பிரசாந்த் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிறார்.
கதிரும் ஜீவாவும் மாமா கிட்ட சொத்து வேணும் என்று கேட்டாங்க. மாமா ஒரு பிரசண்டேஜ் சொத்து தாரேன்னு சொன்னாரு. அதை போதாது என்று தான் கதிர் இந்த மாதிரி பண்ணிட்டான். கண் இமைக்கும் நேரத்துல எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு. நான் எவ்வளவோ தடுக்க போனேன் ஆனா கதிர் என்னை அடிச்சு போட்டுட்டான் என்று சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சி ஆகி மீனா நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சின்னத்திரை பிரபலம் வீட்டு பங்க்ஷனில் நடிகர் ராமராஜன்.. நெகிழ வைத்த காட்சி! வியந்து போன மதுரை -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி












Click it and Unblock the Notifications