போயிட்டியே முல்லை.. பாண்டியன் ஸ்டோர்ஸ்.. மீண்டும் ஷூட்டிங்.. கதறிய நடிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்துள்ளது. முல்லை இல்லாமல் நடந்த அந்த ஷூட்டிங்கின்போது நடிகர், நடிகைகள் கதறி அழுதுள்ளனராம்.

Recommended Video

    சென்னை: முல்லை இல்லாத பாண்டியன் ஸ்டோர்… கண்ணீர் அஞ்சலியுடன் தொடங்கிய ஷூட்டிங்..!

    விஜே சித்ராவின் மரணம் சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களையும் பரப்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது மீண்டும் சூட்டிங் ஆரம்பித்துள்ளது.

    சூட்டிங்கில் அவருக்கு கண்ணீரோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

    மீண்டும் ஷூட்டிங் ஆரம்பம்

    மீண்டும் ஷூட்டிங் ஆரம்பம்

    பாண்டியன் ஸ்டோர் சீரியலிருந்து சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி வீடியோக்களை எடுத்து சித்துவும் அவரது சக நடிகர்களும் தங்களது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ்ட் பண்ணி வருவார்கள் . அந்த வீடியோக்களை பார்த்து அவருடைய ரசிகர்கள் ஜாலியாக கமெண்டுகளை போட்டு வருவார்கள். ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர் .

    இறந்து 2 நாளாச்சு

    இறந்து 2 நாளாச்சு

    சித்ரா இறந்து இரண்டு நாட்கள் ஆனாலும் இன்னமும் ரசிகர்கள் மனதில் அதே கவலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றனர். தங்கள் வீட்டு பெண் போல நினைத்திருந்த ஒருவர் இல்லாத துக்கத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தங்கள் வீட்டில் நடந்த மரணம்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    சித்ராவுக்கு அஞ்சலி

    சித்ராவுக்கு அஞ்சலி

    இந்த நிலையில் அவருக்கு அவருடைய சக நடிகர்கள் கண்ணீரோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருப்பதையும் பார்க்கும்போது தங்களோட கவலைகளையும் கமெண்ட் களாக போட்டு வருகின்றனர். சித்ராவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நிலவிக் கொண்டிருக்கும் போது அவருடைய இழப்பு அனைவருக்குமே பெரிய மன கஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

    போட்டோவுக்கு மாலை

    போட்டோவுக்கு மாலை

    அவரைப் பற்றிதான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்து கொண்டிருக்கிறது .அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் எப்போதுமே சந்தோசமாக பார்த்த இவரை தற்போது போட்டோவில் அதுவும் விளக்கு வைத்து மாலை போட்டு இந்த மாதிரி பார்க்கும்போது பலருக்கும் நெருடலாக தான் இருக்கிறது.

    ரசிகர்களுக்கு இது பேரிழப்புதான்

    ரசிகர்களுக்கு இது பேரிழப்புதான்

    ஒருவர் இல்லாத போது அவருடைய நினைவுகள் மட்டும் தான் அனைவரிடமும் இருக்கின்றது அது போல தான் சித்ரா என்று சொன்னவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அவருடைய ஜாலியான பேச்சும் சிரித்த முகமும் தான் எப்போதுமே தைரியமாக இருக்கும் அவருடைய பேச்சுகளும் பழைய வீடியோஸ்கள் தற்போது வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது.

    இன்னும் வாழ்கிறார் சித்ரா

    இன்னும் வாழ்கிறார் சித்ரா

    அதை பார்த்து பலர் சித்ரா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்பிக்கொண்டு இருந்தாலும் சிலருக்கு இந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்க்கும்போதுதான் கூடுதலாக கவலை வருகிறது.தினமும் ஒரு போஸ்ட் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் ரகளையை வீடியோவாக போட்டு வருவார் .அவர் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் சித்துவின் சேட்டைகளை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணி வருவார்கள். ஆனால் தற்போது அவரின் கண்ணீர் அஞ்சலி வீடியோக்களை போஸ்ட் பண்ணி அனைவரும் கவலையோடு பகிர்ந்து வருகிறார்கள்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+