Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாடர்ன் மகாலட்சுமி இவர்தானோ... சரண்யாவை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புடவை கட்டி வந்து மயிலாக கலக்கும் சரண்யா துரோடியைப் பார்த்து ரசிகர்கள் அன்பைக் கொட்டி வருகின்றனர்.

எங்கோ பார்த்து ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் இழுத்து விட்டார் என்று ரசிகர்களின் கவிதை காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

இவருக்காகவே தினமும் தீபாவளி வராதா என்று ரசிகர்கள் சிலர் ஏங்கிப் போய் கூறி வருகின்றனர்.

புடவையில் சரண்யா துரோடி

புடவையில் சரண்யா துரோடி

தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு.. மாடர்ன் மகாலட்சுமியாக மாறி இருக்கும்.. சரண்யாவின் போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தங்கள் அபிமான செலிபிரிட்டியை இந்த கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள்.. சரண்யாவின் இந்த போஸ்ட்க்கு லைக்குகளையும், கமெண்ட் களையும்..அள்ளி வீசி வருகின்றனர்.

செய்தி வாசிப்பாளராக அறிமுகம்

செய்தி வாசிப்பாளராக அறிமுகம்

செய்தி வாசிப்பாளராக தன் மீடியா வாழ்க்கையை ஆரம்பித்த சரண்யா.. பல்வேறு பிரபல செய்தி சேனல்களில் முழுநேர செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். ஹோம்லி லுக்கில் இவர் செய்தி வாசிக்கும் அழகுக்கென்றே.. செய்தி சேனல்களை பார்த்த இளைஞர்கள் கூட்டம் அந்த நேரத்தில் அதிகமாக இருந்தனர் .இவருக்கு மக்களிடம் இருக்கும் கிரேஸை புரிந்துகொண்ட பிரபல சேனல்கள் தங்கள் சேனலில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் லீடு ரோலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு அளித்தனர்.

நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா

நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா

விஜய் டிவி, சன் டிவி, என்று மாறி..மாறி.. சீரியலில் நடித்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' ..என்ற சீரியல் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. கொஞ்சநாள் சின்னத்திரைக்கு எல்லாம் ஓய்வு விட்ட சரண்யா, மீண்டும் ஒரு புது சீரியல் மூலம் ரீ- என்ட்ரி ஆகப் போவதாக கொஞ்ச நாட்களுக்கு முன்பு சில சூட்டிங்க் ஸ்பார்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது..அது எந்த சீரியல்..? எந்த சேனல்..? என்று இவரது ரசிகர்கள் இணையத்தில் ஒரு விவாதமே நடத்தினர். ஆனால் இவர் அது குறித்து இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை...!

மீண்டும் ரீ-என்ட்ரி

மீண்டும் ரீ-என்ட்ரி

தற்பொழுது தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஏறக்குறைய இருவரும் ஒரே காலகட்டத்தில் தான் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகின்றனர். ஆனால் பிரியா பவானி சங்கர் சீரியல் மற்றும் வெள்ளித்திரை என்று அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கின்றார். அதுபோல் சரண்யாவும் தன்னுடைய ரீ என்ட்ரி மூலம் சாதிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்பொழுது கூட மாடலாக உடுத்திய பட்டுப் புடவையில் இவர் போஸ்ட் செய்துள்ள போட்டோக்களை பார்த்து 'இதைவிட பெஸ்ட் சாரீ போட்டோஷூட் காட்டுறவங்களுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் என்று சேலஞ்ச் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+