மகன்களின் வாழ்க்கை! பிரபுதேவா இப்படிப்பட்டவர் தான்..டைவர்ஸ்க்கு பிறகு மனம் திறந்து பேசிய முதல் மனைவி
சென்னை: டான்ஸ் மாஸ்டர் ஆகவும் நடிகராகவும் பிரபலம் அடைந்த பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பிரபுதேவா பற்றி பல விஷயங்களை தனியார் youtube சேனலில் பகிர்ந்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு பிரபுதேவா எப்படி நடந்து கொள்கிறார் என்றும் தன்னுடைய இரண்டு மகன்கள் குறித்தும் வெளிப்படையாக பேசுகிறார்.
பொதுவாக சினிமா மற்றும் சீரியல் என பலவற்றில் ஒன்றாக வேலை செய்பவர்கள் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர்தான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணித்து வருகிறார்கள். ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விவாகரத்து வாங்கிவிட்டு பிரிந்து விடுகிறார்கள். அதுபோல பலருக்கும் பரிச்சயமான நடிகர் பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தார்.

பிரிந்த காதல்
பிரபுதேவாவை நடிகராக பலருக்கும் தெரிந்திருக்கும், டான்ஸ் மாஸ்டராகவும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு இயக்குனர் என்பது ஒரு சிலருக்கு தான் தெரிந்திருக்கும் தான். ஆரம்பத்தில் குரூப் டான்சராக இருந்து பிறகு டான்ஸ் மாஸ்டராகவும், நடிகர் இயக்குனர் என்று பல முகங்களை கொண்ட பிரபுதேவா தன்னுடன் நீ குரூப் டான்ஸ் ஆக இருந்த ரமலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மதம் மாறி திருமணம்
ரமலான் பிரபுதேவாவிற்காக இந்து மதத்திற்கு மாறி திருமணம் செய்து இருந்தார். இந்த தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர். அதில் மூத்த மகன் 15 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் காலமானார். பிறகு இரண்டு மகன்களையும் பிரபுதேவா பாதுகாத்து வளர்த்து வருகிறார். அதுபோல வில்லு படத்தை பிரபு தேவா இயக்கிய போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவோடு பிரபுதேவாவுக்கு காதல் ஏற்பட்டது.
நயன்தாராவோடு பிரிவு
அந்த நேரத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தன்னுடைய கையில் டாட்டூ போட்டு இருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. பல நிகழ்ச்சிகளிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் பிரபுதேவா தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து இருந்தார். அதற்குப் பிறகு சில வருடங்களிலேயே நயன்தாராவோடு பிரச்சனை ஏற்பட அவர் பிரிந்து விட்டார்.
காதல் திருமணம்
அதற்கு பிறகு வேறொரு பெண்ணை பிரபுதேவா திருமணம் செய்திருந்தார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் தனியார் youtube சேனல் ஒன்றில் பிரபுதேவா குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் அவர் பேசுகையில் நானும் பிரபுதேவாவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம்.
குடும்பத்தின் மீது அக்கறை
எங்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அதில் மூத்த மகன் மீது நாங்கள் ரொம்பவும் பாசமாக இருந்தோம். ஆனால் அவர் எங்களை விட்டு பிரிந்து விட்டார். அதற்குப் பிறகு இரண்டு குழந்தைகளையும் பிரபு தேவா நன்றாக தான் வளர்த்து வருகிறார். எங்களுக்குள் விவாகரத்து நடந்து விட்டது, விவாகரத்துக்கு பிறகும் பிரபுதேவா குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்கிறார்.
முதல் மகன் நடிகர்
என்னிடமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். எது நடந்திருந்தாலும் எங்களுக்கு துணையாக பிரபுதேவா தான் இருக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தான் முதலில் சொல்வார். சமீபத்தில் கூட எங்களுடைய மகனும் பிரபுதேவாவும் டான்ஸ் ஆடியது பெரிய அளவில் பேசப்பட்டது. பிரபுதேவாவின் மகன் அவரைப் போலவே டான்ஸ் ஆடுகிறார் என்று பலரும் பாராட்டி இருந்தனர். எப்படி இருந்தாலும் அவருடைய அப்பாவின் ரத்தம் தானே மகனுக்கும் இருக்கும் அதனால் அவர் டான்ஸ் ஆடுவதில் பெரிய அதிசயம் எதுவும் இல்லை.
இரண்டாவது மகன் மருத்துவர்
கடந்த இரண்டு வருடங்களாகத்தான் என்னுடைய மகன் டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். அதுபோல என்னுடைய மகனுக்கு படங்களில் நடிக்கவும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு சரியான நேரம் வரும்போது அவரும் சினிமாவில் அறிமுகம் ஆவார். ஆனால் இரண்டாவது மகனுக்கு சினிமாவில் வருவது பிடிக்கவில்லை. அவருக்கு மருத்துவராக தான் பிடித்திருக்கிறது. அதற்காகத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்.

குறை எதுவும் இல்லை
பிரபுதேவா பற்றி நான் எந்த இடத்திலும் குறை கூற மாட்டேன். அவரும் என்னைப் பற்றி எந்த இடத்திலும் தவறாக பேசியது இல்லை. விவாகரத்து ஆன பிறகும் பெண்கள் குடும்பத்தை பிரபு தேவா தான் கவனித்து வருகிறார். இப்படி இருக்கும்போது நாங்கள் எதற்காக அவரைப் பற்றி குறை சொல்ல வேண்டும் என்று அந்த பேட்டியில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேசியிருக்கிறார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications