Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Priyanka: ‘சூப்பர் சிங்கர்’ மேடையில் காலில் எலும்பு முறிவு: ஆசை நிறைவேறாதது வருத்தம்! பிரியங்கா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா, தனது காலில் அடிபட்டதைப் பற்றிய ஒரு சோகமான அனுபவத்தை, ஒரு யூடியூப் நேர்காணலில், பகிர்ந்து கொண்டார். ஆனால், பிரியங்காவுக்கு, தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை விட, நடிகர் கமல்ஹாசனுடன் நடனம் ஆட முடியாமல் போனதே, அவருக்குப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Priyanka vijay tv Super Singer

பிரியங்காவின் நேர்காணல்

"சூப்பர் சிங்கர் ஃபைனல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தபோது, நிகழ்ச்சி தொடங்குவதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, நான் தவறி கீழே விழுந்துவிட்டேன்," என்று, பிரியங்கா, தனது விபத்தைப் பற்றி, கூறினார். அப்போது, அவரது காலில், எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.

கமலுடன் டான்ஸ்

"கால் நன்றாக இருந்திருந்தால், அந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசனுடன் குத்தாட்டம் போட்டிருக்கலாம். அதைச் செய்ய முடியாமல் போனதே, தனக்கு பெரிய வருத்தமாக இருந்தது," என்று, பிரியங்கா கூறினார். "காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தாலும், புன்னகையுடன், 'கொஞ்சம் காலில் டேமேஜ் தான், கொஞ்ச நாட்களுக்கு ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்,' என்று, நான் சொன்னேன்," என்று, அவர் தெரிவித்தார்.

தொடர் ஓட்டம்

இது ஒரு 'லைவ்' நிகழ்ச்சி என்பதால், நிகழ்ச்சியை நிறுத்த முடியாது. கூட இருந்த மற்றொரு தொகுப்பாளரால், தனியாக நிகழ்ச்சியை நடத்திச் செல்ல முடியாது. எனவே, வலியுடனே அவர், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பிரியங்காவிற்கு சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் முடிந்தது திருமணம் முடிந்த பிறகு விஜய் டிவியில் அவர் இனி நிகழ்ச்சி தொகுத்து வழங்க மாட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது ஆனால் அதற்கு பதிலடி கொடுக்க வகையில் புதியதாக ஒரு நிகழ்ச்சியும் பிரியங்கா தொகுத்து வழங்க தொடங்கி விட்டார்.

கணவரின் போஸ்ட்

இப்போது தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் தன்னுடைய கணவரோடு ஹனிமூன் சென்று இருக்கிறார் அப்போது எடுத்த புகைப்படங்களையும் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு இருந்த சமயத்தில் அவர் தன்னுடைய அம்மா வீட்டில் இருந்தார். அப்போது அவருடைய கணவர் சோகமான போஸ்ட்களை போட்டிருந்தார். இதனால் பிரியங்காவும் அவருடைய கணவரும் பிரிந்து விட்டார்களா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது அடிக்கடி சர்ச்சையில் பிரியங்கா சிக்கிக்கொண்டிருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய தன்னம்பிக்கையால் அடுத்தடுத்து அவர் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+