அந்தரங்கம் அம்பலம்? மணிமேகலை விஷயம் ஆல்ரெடி ஓவர்.. பிரியங்கா மீது அபாண்டம் கூடாது: பிரபலம் சப்போர்ட்
சென்னை: பிரவீனுடன் விவாகரத்து பெற்ற பிறகுதான் பிரியங்காவுக்கு வசியுடன் அறிமுகம் ஆகிறது.. பிரவீன் இருந்தபோதே, வசியுடன் நட்பு இருந்ததாக சிலர் சொல்கிறார்கள். அதுவும் தவறான தகவலாகும்.. நட்பு ரீதியாக நிகழ்ச்சிகளில் வசியை சந்தித்திருக்கலாம். அப்படியே இருந்தாலும், பெண்களின் அந்தரங்கத்தை தோண்டுவது நல்லது கிடையாது" மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் விஜய் டிவி பிரியங்காவை ஆதரித்து பேசியிருக்கிறார்.
Cine Kazhugu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "எனக்கு விஜய் டிவி வேண்டாம், நான் லண்டனில் வாழப்போகிறேன் என்று பிரியங்காவே விலகி போவாரே தவிர, விஜய் டிவி அவரை வெளியே அனுப்பாது.. விஜய் டிவி நிர்வாகம், அந்த அளவுக்கு பிரியங்காவுக்கு நெருக்கம். ஒருவேளை பிரியங்கா விஜய் டிவியிலிருந்து விலகி சென்றால், பலருக்கும் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்கும்.

மணிமேகலை குக் வித் கோமாளி
குக் வித் கோமாளியில் நல்ல பர்பாமன்ஸ் செய்து கொண்டிருந்தார் மணிமேகலை.. அப்போது பாதியிலேயே வந்து நிகழ்ச்சியை தன்வசம் எடுத்துக் கொண்டார் பிரியங்கா.. இதுகுறித்து விஜய் டிவி நிர்வாகத்திடம் மணிமேகலை புகார் கொண்டுபோனதற்கு, பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்க சொல்லி உள்ளது. இதனால்தான் அப்போது சர்ச்சையானது..
பல தொகுப்பாளினிகள் இதை ஏற்க முடியாமல் வெளியேறி சென்றுவிட்டார்கள்.. ஆனால், மணிமேகலை சர்ச்சை செய்து விட்டு வெளியேறிவிட்டார்.. அதனால்தான் இந்த விஷயம் வெளியே தெரியவந்தது..
இது ஒன்றும் ரகசிய திருமணம் இல்லை
பிரியங்கா திருமணம் செய்தது ரகசியம் ஒன்றும் இல்லை.. குடும்பத்தினர், நண்பர்கள் கலந்துதான் திருமணம் தடதபுடலாக செய்துள்ளனர்.. கல்யாண வீடியோவும் பதிவிட்டுள்ளார்களே.. அப்படியிருக்கும்போது, இதனை ரகசிய திருமணம் என்று சொல்ல முடியாது.. அதேசமயம், மாப்பிள்ளை வயதானவர், தலைமுடி நரைத்தவர் என்பதெல்லாம் பிரியங்கா சம்பந்தப்பட்ட விஷயம்.. இது அவரவர் விருப்பத்தை பொறுத்தது.. ஆணும், பெண்ணும் விரும்பி செய்யும் திருமணத்தை சர்ச்சையாக்குவது சரியான பார்வை அல்ல..
ஏனென்றால், வசிக்கும் இது 2வது திருமணம், பிரியங்காவுக்கும் இது 2 வது திருமணம்.. அதுவும் இல்லாமல், அது அவர்களது குடும்ப விஷயம்.. அதை மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்வது ஆரோக்கியமானது கிடையாது..
பிரியங்காவுக்கு குழந்தையா?
அதேபோல, பிரியங்காவுக்கு முதல் கணவன் மூலம் குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தையை வளர்ப்பதற்காக தற்போது திருமணம் செய்துள்ளதாகவும் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. இதுவும் பொய்யான தகவலாகும்.. தன்னுடைய பாதுகாப்புக்காக மனம்விரும்பி திருமணம் செய்துள்ளார்..
பிரவீனுடன் விவாகரத்து பெற்ற பிறகுதான் பிரியங்காவுக்கு வசியுடன் அறிமுகம் ஆகிறது.. பிரவீன் இருந்தபோதே, வசியுடன் நட்பு இருந்ததாக சிலர் சொல்கிறார்கள். அதுவும் தவறான தகவலாகும்..
நட்பு ரீதியாக நிகழ்ச்சிகளில் வசியை சந்தித்திருக்கலாம். அப்படியே இருந்தாலும், பெண்களின் அந்தரங்கத்தை தோண்டுவது நல்லது கிடையாது.. மணிமேகலை விஷயத்தின்போது, பிரியங்காவை எல்லாருமே கண்டித்தார்கள்.. அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது. அதற்காக பிரியங்கா செய்வதையெல்லாம் விமர்சிக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications