தலைசாய்த்து பார்த்த ரச்சிதா.. சிந்திய வெட்கம்.. தலைகுப்புற விழுந்த ரசிகர்கள்!
சென்னை : கையை தூக்கி தலையை சாய்த்து கேஷுவலாக பார்த்த ரச்சிதாவை பார்த்து வெடவெடத்து போய் விட்டனர் ரசிகர்கள்.
தமிழ் சின்னத்திரை கண்ட நல்ல நடிகைகளில் ரச்சிதாவுக்கும் ஒரு நல்ல இடம் உண்டு. குறிப்பாக இவரது நடிப்புக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
சரவணன் மீனாட்சியில் ஒரு வகையான நடிப்பைக் கொடுத்தார் என்றால், இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இன்னும் அசத்துகிறார்.
இவருக்கு அதுதான் செம அழகு
மாடர்ன் உடையில் எத்தனை பேரு வந்தாலும் புடவையில் வரும் ரச்சிதாவை அடிச்சுக்க முடியாது என்பது ரசிகர்களின் தீர்ப்பாகும். உதட்டு மேல் சின்னதாக இருக்கும் அந்த மச்சமும், வில் புருவமும், கண்ணும், புடவை காஸ்ட்யூமில் மேலும் சூப்பராக மாறி விடுகிறது என்று ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். புருவத்தை பெரிதாக்கி புன்னகை சிந்தும் இவரை பார்த்த ரசிகர்கள் " வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் "என்று சுற்றி சுற்றி வருகின்றனர்.
பார்க்கறதுக்குத்தானே கட்டுறது
கலர் கலராக இவர் கட்டும் புடவையை பார்ப்பதற்காக ஒரு கூட்டம் இவரை சுற்றுகிறது என்றால் இவருடைய அழகை வர்ணிக்க இன்னொரு கூட்டம் வலம் வருகிறது. இப்படியே ரசிகர்கள் இவரை புடைசூழ வந்து கொண்டிருப்பதால் தான் இவரும் தினமும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். ஒருநாள் போஸ்ட் போடவில்லை என்றாலும் இவருடைய ரசிகர்களின் நச்சரிப்புத் தாங்க வில்லையாம் .எப்போ வருவார் என்றுதான் இவருக்காக காத்திருக்கிறார்கள்.
ரெண்டும் ஒன்னுதான்
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தார். இந்த சீரியலில் நடித்து பிரபலமானதைவிடவும் முதல் சீரியலில் வந்தவர் இவர் தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு கெட்டப்பில் கலக்கியிருந்தார். இவருடைய கிராமத்து கருப்பான உருவத்தை பார்த்து வந்த ரசிகர்கள் இவர்தான் அந்த சீரியலில் நடித்தார் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
சீரியல் காதலர் நிஜ கணவர்
சீரியலிலோ திரைப்படங்களிலே ஒன்றாக நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த மாதிரி தான் இவரும் இவருடன் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று செய்தி தெரிந்ததும் ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
மயக்கும் பேரழகிதான்
தற்போது சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சூட்டிங் நேரம் போக ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் மாடலிங் பண்ணி வருகிறார். இவர் எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். இதை பார்ப்பதற்காகவே இவருடைய ரசிகர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் செக் பண்ணி வருகிறார்களாம். இவர் போஸ்ட் போட்டதும் கமெண்ட்களால் வலைதளத்தை வதைத்து வருகின்றனர். அடிக்கடி புடவையில் போட்டோ வெளியிட்டாலும் சலிக்காத ரசிகர்கள் மாடர்ன் உடை எப்போது வரும் என ஏங்கி வருகின்றனர்.