நீதிமன்ற தீர்ப்பு..! கணவரோடு வாழ்க்கை குறித்து சூசகமாக பதிவு வெளியிட்ட ரச்சிதா
சென்னை: நடிகை ரச்சிதா இனி கணவரோடு சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதை சமூகவலைதளத்தில் சூசகமாக பதிவு வெளியிட்டு தெரிவித்து இருக்கிறார்.
மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பகிர்ந்து ரச்சிதா தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே ரச்சிதா ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்ள வேண்டும் என்று ஆசையை தெரிவித்து இருந்தார்.
தற்போது அதற்கான வழி கிடைத்து விட்டது என்று கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி அந்த சீரியலில் அவரோடு நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களுடைய திருமண வாழ்க்கை பல வருடங்களாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிரிந்து வாழ்ந்து வரும் நிலையிலும் தினேஷ் சமூக வலைத்தளங்களில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் இருவருக்கும் இருக்கும் பிரிவு தற்காலிகமானது தான் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். இருவரும் மனம் விட்டு பேசினால் பிரச்சனை தீர்ந்துவிடும். என்னுடைய கோபத்தினால் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் பல தகவல்களை கூறியிருந்தார்.
இதுபோல ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது, முதல் நாளிலிருந்து கடைசி வரைக்கும் அவருக்கு தன்னுடைய வாக்குகளை செலுத்தி ஆதரவையும், ரச்சிதா உடன் நல்லபடியாக பழகும் நண்பர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து, ரச்சிதாவிடம் அளவுக்கு அதிகமாக பழகிய ராபர்ட் மாஸ்டரை திட்டியும் அவருக்கு வார்னிங்கும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எப்படியும் இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தது, இப்ப வரைக்கும் நடக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ரச்சிதா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். அதில் தற்சமயம் மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனியாக வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் இனி குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பை பகிர்ந்து, இது போதும். இனிமேல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ரச்சிதா விக்கிரமனிடம் நான் என்னுடைய 35 வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற ரச்சிதா குழந்தை என்றாலே எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசைதான் எனக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அது பெண் குழந்தைகள் என்றால் நான் வீழ்ந்து விடுவேன். குழந்தைகளை எப்படி பார்க்கிறேனோ அது போல் தான் இங்கு இருக்கும் பெரியவர்களையும் பார்க்கிறேன் என்று பேசி இருந்தார்.
-
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications