Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அவரே ரத்தத்தை நம்பி இருக்கும்போது..” - ரஜினியை பங்கமாக கலாய்த்த ராதாரவி! கடைசியில் இப்படி சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா உலகில் நடிப்பால் மட்டும் அல்லாமல் சர்ச்சையான பேச்சால் எப்போதும் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில், பிரஷாத் ராமன் இயக்கத்தில், அவர் நடித்துள்ள 'தாவூத்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் ராதாரவி பேசிய பேச்சு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Radha Ravi Rajinikanth

ராதா ரவி பேச்சு

'தாவூத்'விழாவில் பேசிய ராதாரவி, "நான் இரண்டு காலிலும் ஆபரேஷன் பண்ணி, இரண்டு வருஷம் படுக்கையில் இருந்தேன். சினிமாவில் இருக்கிறவங்க எப்பவும் சுறுசுறுப்பா இருக்கணும், இல்லைன்னா செத்துப் போயிட்டாங்கன்னு சொல்லி வேற ஆளைப் போட்டுருவாங்க. இந்த படக்குழுவினர் நல்லவங்க. இந்த படத்துல பேய் இல்லை, ஆனா வெட்டுக்குத்து இருக்கு. ஏன்னா, இந்தப் படம் வெற்றி பெறணும்னா அதுதான் தேவை" என்று தனது பாணியில் ஆரம்பித்தார்.

பிறகு, "ஆளான பட்ட ரஜினி படத்துலயே வெறும் ரத்தமா இருக்கு. கூலி படத்துல வன்முறையின் உச்சம் இருக்கு. அதனாலதான் அந்தப் படத்துக்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க. அவரே ரத்தத்தை நம்பி இருக்கும்போது, நம்மலாம் என்ன? படம் ஆரம்பத்துல இருந்தே ரத்தத்தைக் காட்டலாம், தப்பில்ல" என்று பேசியதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் விவாதமாகி வருகிறது.ராதாரவி சொல்வதைப் பார்த்தால், இன்று ரத்தம், வன்முறை இல்லாத படங்கள் ஓடாது என்று சூசகமாகச் சொல்கிறார்.

சர்ச்சைகளின் நாயகன்

நடிகர் ராதாரவி, பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன். தன் தந்தையைப் போலவே, எந்தவித சமரசமும் இல்லாமல், மனதில் பட்டதை தைரியமாகப் பேசுவதில் இவருக்கு இணை இவர்தான். வில்லன், குணச்சித்திர நடிகர், அரசியல்வாதி எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. இவருடைய பேச்சுக்கள் பெரும்பாலும் சர்ச்சையாகி, பலமுறை இவரைப் பிரச்சினையில் சிக்க வைத்துள்ளன. சில ஹீரோயின்கள் பற்றி இவர் பேசியது, அரசியல் கருத்துக்கள் என இவரது சர்ச்சைகள் ஒரு பெரிய லிஸ்ட். ரஜினிகாந்த் பற்றிப் பேசுவதும் இவருக்குப் புதிதல்ல. கடந்த காலங்களில் ரஜினி குறித்துப் பலமுறை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். சில சமயங்களில் பாராட்டுவார், சில சமயங்களில் விமர்சிப்பார்.

ரஜினி என்னும் ஆக்‌ஷன் சிம்பல்

ராதாரவி குறிப்பிட்டுப் பேசியதுபோல, ரஜினிகாந்த் 75 வயதிலும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளாகப் படங்களில் நடித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகர்களுக்குக் கடும் போட்டியாளராக விளங்குகிறார். 80-களில், 'கறுப்பு நிறம், நடுத்தர உயரம்' என்ற ஹீரோ அடையாளத்தை உடைத்து, ஸ்டைல் மன்னனாக ரசிகர்களைக் கவர்ந்தார்.

'முரட்டுக்காளை' படத்தில் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்த பின்னர், அவரது படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. சமீபத்தில் வெளியான 'கூலி' படத்திலும், வன்முறையின் உச்சம் இருந்தாலும், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதை முறியடித்துவிட்டது. ராதாரவியின் பேச்சு ஒருபுறம் இருந்தாலும், ரஜினியின் பெயர், இன்றும் வசூலிலும், ஆக்‌ஷனிலும் ஒரு பிராண்ட் என்பதை அது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+