சந்தியாவை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம்! ? காரணம் இதுதானா?

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நடிகை வைஷ்ணவி விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா சமீபத்தில் தான் விலகி இருந்தார்

ரியாவை தொடர்ந்து பார்வதி கேரக்டரில் நடித்து வந்த நடிகை வைஷ்ணவியும் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகை வைஷ்ணவி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

பிற மொழி தழுவல்

பிற மொழி தழுவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது டிஆர்பிலும் இந்த சீரியல் முன்னோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீரியல் பிற மொழியின் தழுவலாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டனர். தொடர்ந்து இரண்டு வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலில் நடிகர்களும் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.சின்ன கேரக்டராக நடித்தாலும் சரி பெரிய கேரக்டராக நடித்தாலும் சரி அனைவருக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.

கதாநாயகி மாற்றம்

கதாநாயகி மாற்றம்

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலர் மாறிக்கொண்டே இருக்கின்றனர். கதாநாயகியாக ஆரம்பத்தில் நடித்து வந்த ஆலியா மானசா விலகி இருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து வில்லியாக நடித்த விஜே அர்ச்சனாவும் விலகினார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது சந்தியாவாக நடித்து வந்த ரியா திடீரென்று வீடியோ வெளியிட்டு தான் சீரியலில் இருந்து விலகிய செய்தியை அறிவித்து இருந்தார். அதற்கான காரணத்தை கூறவில்லை என்றாலும் தன்னுடைய ரசிகர்களிடம் தனக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி மட்டும் கூறியிருந்தார்.

ராஜா ராணி பார்வதி

ராஜா ராணி பார்வதி

இந்த நிலையில் புதிய சந்தியாக ஆஷா கவுடா நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது இந்த சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து வந்த நடிகை வைஷ்ணவியும் விலகி இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த சீரியலில் பார்வதி கேரக்டர் சரவணனின் ஒரே தங்கையாக இருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் மற்றும் திருமணத்தில் நடந்த பிரச்சனைகள் பெரும் பரபரப்போடு ஒளிபரப்பான நிலையில் தற்போது பார்வதி கேரக்டர் அதிகமாக காட்டப்படாமல் தான் இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் சொல்வது உண்மைதான் என்று என்னதான் தோன்றுகிறது.

புதிய சீரியல்

புதிய சீரியல்

இந்த நிலையில் விஜய் டிவியில் விரைவில் வெளியாக இருக்கும் பொன்னி சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடிகை வைஷ்ணவி தான் அதாவது ராஜா ராணி சீரியலில் பார்வதியாக நடித்த நடிகை தான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதனால் தான் அப்போ ராஜா ராணி சீரியலில் இவர் அதிகமாக காட்டப்படாமல் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், பொன்னி சீரியலில் நடிக்கும் வைஷ்ணவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+