இரவு நேரத்தில் பிரியங்கா செய்த செயலைப் பார்த்து பதறிய ராஜு
சென்னை: கண்ணாடி முன்னாடி இரவு நேரத்தில் பிரியங்கா செய்த செயலைப் பார்த்து ராஜு பதறிப் போய் இருக்கிறார்.
வீடியோவில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஐயோ என்று சொல்கின்ற மாதிரி தான் இருந்து உள்ளதாம்.
அட இரவு நேரத்தில் இப்படி எல்லாம் கூட செய்கிறார்களா?? என்று நெட்டிசன்கள் கூட கலாய்த்து வருகிறார்கள்.

பிக் பாஸில் நடக்கும் நடைமுறை
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பல கேமராக்களுக்கு மத்தியில் செய்யும் செயலை ரசிகர்களுக்கு காட்டி நிகழ்ச்சிக்கு டிஆர்பி கூட்டுவதாக இருந்தாலும்,இதில் நடக்கும் பல விஷயங்கள் பலருடைய கவனத்தை மட்டுமல்லாமல் கருத்துக்களையும் ஈர்த்து வருகிறது. ஒரு சில நேரங்களில் இவர்கள் செய்யும் செயல்கள் இவர்களா இப்படி என்று முகம் சுளிக்க வைத்து விடுகிறது. ஆனால் சில நேரங்களில் சில போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் அவர்களைப்பற்றிய மேன்மையான கருத்துக்களை மேலும் கூட்டி விடுகிறது.

இரவு நேரத்தில் இப்படியா
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்கள் பலருக்கும் பரிச்சயமான மற்றும் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களாக இருக்கும் ராஜு மற்றும் பிரியங்கா செய்த செயல் தான் நேற்றைய எபிசோடில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே அல்டிமேட் காமெடி ஸ்டார் என்பது அனைவருக்கும் தெரியும் .சும்மாவே இவர்கள் காம்போ அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடும். அதுவும் இரவு நேரத்தில் எதிர்பாராத விதமாக நடந்த செயல் ரசிகர்களுக்கும் எதிர்பாராமல் சிரிக்க வைத்து விடுகிறது.

பதறிப்போன ராஜூ
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஃப்ரீஸ் டாஸ்க்கில் வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் அனைவரும் சொல்வது ராஜூ மற்றும் பிரியங்கா காம்போ வேற லெவல் என்று தான். அனைத்து தரப்பினரையும் தங்களுடைய காமெடி ஆளும் எதார்த்தமான செயல்பாடுகளால் கட்டி இழுத்து வைத்திருக்கும் பிரியங்கா நேற்று இரவு முகத்திற்கு மேக்கப் போட்டுக்கொண்டு பாத்ரூம் அருகில் இருக்கும் கண்ணாடி முன்பு முகத்தில் வைட் கலர் ஃபேஸ் மாஸ்க் போட்டு கொண்டு நின்று கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று வந்த ராஜு பிரியங்காவை பார்த்து பதறிப் போய் விட்டார்.
Recommended Video

இப்படி செய்யலாமா பிரியங்கா
சும்மாவே இரவு நேரத்தில் கண்ணாடி முன்பு நம் முகத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கும் அதுவும் இப்படி பாத்ரூம் வாசலில் இருக்கும் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு பிரியங்கா செய்த செயலைப் பார்த்து ராஜூ மட்டுமல்லாமல் நேற்றைய எபிசோடு பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போய் இருக்கிறார்களாம். அதை வைத்து பல ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள். என்னதான் பிரியங்கா பல நேரங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறிக் கொண்டிருந்தாலும் இவருடைய யதார்த்தமான செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications