போதும் இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.. இனி மகாலட்சுமி பேச்சை எடுக்காதீங்க.. ரவீந்தருக்கு என்னாச்சு?
சென்னை: 300 பட்டுப்புடவை, 75 லட்ச ரூபாயில் பங்களா இதெல்லாம் பொய், அப்படியெல்லாம் நான் மகாலட்சுமிக்கு வாங்கித் தரவில்லை என தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மறுத்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து திடீரென செப்டம்பர் 1 ஆம் தேதி மகாலட்சுமியும் ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் கடந்த 10 நாட்களாகியும் வைரலாகி பேசும் பொருளாகியுள்ளது.
இவர்களது திருமணம் திடீரென வைரலானதற்கு காரணம் ரவீந்தர் வனிதா விஜயகுமார் திருமணத்தில் கூறிய கருத்துகள், ஒன்றரை ஆண்டுகளாக இவர்களது காதல் ஒரு சொட்டுக் கூட லீக்காகாதது, இப்படி உடல் அமைப்பு கொண்டவருக்கு இத்தனை அழகான மனைவியா என்பது உள்ளிட்டவையே ஆகும்.

திருமணம்
இவர்கள் திருமணம் முடிந்த பிறகு கூட இவர்களது இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக வெளியிட்ட புகைப்படங்களால் 90 கிட்ஸ்கள் வயிற்றெரிச்சலில் உள்ளார்கள் என சொல்லலாம். இந்த நிலையில் மகாலட்சுமிக்காக ரவீந்தர் ஒரு சில பரிசுகளை கொடுத்துள்ளார் என்ற தகவல்களும் வைரலாகி வருகின்றன.

300 பட்டுப்புடவை
அதாவது மகாலட்சுமிக்காக 300 பட்டுப்புடவைகளையும் தலை முதல் கால் வரை நிறைய நகைகளையும் கொடுத்துள்ளதாகவும் மகாலட்சுமிக்காக 75 லட்சம் மதிப்பில் ஒரு பங்களாவை கட்டி வருவதாகவும், அதில் தங்க முலாம் பூசப்பட்ட கட்டிலும் தயாராகி வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் வெளியாகின.

இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரவீந்தர் லைவில் வந்து பேட்டி கொடுத்தார். அதில் நான் யாரையும் அழ வைத்துவிட்டு மகாலட்சுமியை திருமணம் செய்யவில்லை. எனவே எனது திருமணத்தை வனிதாவுக்கு நான் செய்த அட்வைஸுடன் ஒப்பிடாதீர்கள். இனி பேட்டிக்காக என்னை யாரும் தொடர்பு கொள்ளாதீர்கள்.

திருமணத்தை பற்றி பேச வேண்டாம்
இத்துடன் போதும் முடித்துக் கொள்ளலாம். மகாலட்சுமியை அசிங்கமாக பேசாதீர்கள். நீங்கள் அசிங்கமான கமென்ட் போடும் முன்பு நீங்கள் அடித்ததை உங்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் ஆகியோரை அழைத்து படித்து பார்க்க சொல்லுங்கள். அப்போது அவர்களது மனம் எப்படி கஷ்டப்படுகிறதோ அப்படித்தான் நீங்கள் விமர்சனம் செய்வோரின் மனமும்! எங்கள் திருமணத்தை வைத்து ஆளாளுக்கு எதை எதையோ கிளப்பி வருகிறார்கள். ஒரு யூடியூப் சேனலில் நான் மகாலட்சுமிக்காக 300 பட்டுப்புடவைகளையும் நகைகளையும் கொடுத்தாக கூறுகிறார்கள். அத்துடன் 75 லட்சத்தில் பங்களா என்றெல்லாம் கூறுகிறார்கள்.

கன்டென்ட்
அதெல்லாம் உண்மை இல்லை. உங்களுக்கு கன்டென்ட் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள். அதை விட்டுவிட்டு நீங்களாக எதை எதையோ எழுதாதீர்கள் என்றார். அப்போது மகாலட்சுமியை அழைத்தார். அவர் நான் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டேன் என என்னை எதுவேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் என் கணவரை யாரும் பாடி ஷேமிங் செய்யாதீர்கள் என உருக்கமாக கேட்டுக் கொண்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications