திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு வரும் ரித்திகா.. ஆனால் அந்த இடம் எதிர்பார்க்காதது.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த ரித்திகா மீண்டும் அவர் நடித்து வந்த பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வருகிறார்.

ரித்திகா கூறிய செய்தியை கேட்டு ரசிகர்கள் வாழ்த்து கூறி வரவேற்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் ஊரை விட்டு கிளம்பி போன ரித்திகா இப்போது கிராமத்தில் புது கதையோடு வர இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு காணவில்லை

திருமணத்திற்கு பிறகு காணவில்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகா சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த நிலையில் இந்த சீரியலில் இருந்தும் சில மாதங்களாக காணாமல் போயிருந்தார். இவருடைய திருமணத்திற்கு முந்தின வாரம் வரைக்கும் இவருடைய எபிசோடுகள் இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு எபிசோடுகளில் இவரை காட்டாமல் அமிர்தா சொந்த ஊருக்கு சென்று விட்டார் என்று மட்டும் கூறி வந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக மீண்டும் தான் இந்த சீரியலில் வர இருக்கிறேன் என்று வீடியோ ஒன்றை ரித்திகா வெளியிட்டு இருக்கிறார்.

தேடும் ரசிகர்கள்

தேடும் ரசிகர்கள்

சமூக வலைத்தளத்தில் ரித்திகா திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பாரா? இல்லையாயட? என்று ரசிகர்கள் அதிகமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது ரித்திகா நான் மீண்டும் அமிர்தாவாக வரப்போகிறேன் என்று வெளியிட்ட பதிவு பலருடைய வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இந்த சீரியலில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவை சுற்றியே கதை நகர இருக்கிறது. இனி எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் தான் அடுத்த திருப்புமுனையாக இருக்கும் நிலையில் அமிர்தாவை காணவில்லையே என்று ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் தேடிக் கொண்டிருந்தனர்.

பெற்றோரின் உறுதியான முடிவு

பெற்றோரின் உறுதியான முடிவு

பாக்கியலட்சுமி சீரியலில் வர்ஷினி அமிர்தாவின் வீட்டில் தான் எழிலை விரும்புவதாகவும் எழில் வீட்டில் அனைவரும் எங்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள். அதனால் எங்களுடைய திருமணத்திற்கு அமிர்தா தான் என்னுடைய தோழியாக வரவேண்டும் என்று பேசிய அடுத்த நாளிலிருந்து ரித்திகா அந்த சீரியலில் இல்லை. எழில் தினமும் அமிர்தாவுக்கு போன் செய்து பார்த்துக் கொண்டிருந்தாலும் அமிர்தா ஃபோனை எடுக்கவில்லையே என்று பீல் பண்ணிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று எபிசோட்டில், அமிர்தாவின் பெற்றோர் இந்த திருமணம் நடைபெறாது என்று திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து இன்று அவர்களும் அந்த வீட்டில் இல்லாமல் கிளம்பி விட்டனர்.

மீண்டும் வந்துவிட்டார்

மீண்டும் வந்துவிட்டார்

அனைவரும் சொந்த ஊருக்கு போய்விட்ட நிலையில் எழில் இன்று சோகப் பாட்டோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி சொந்த ஊரில் இருக்கும் அமிர்தா எபிசோடுகள் வர இருக்கிறது. இதுவரைக்கும் திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் என பிசியாக இருந்த ரித்திகா மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஒரு சிலர் ரித்திகாக்கு திருமணம் முடிந்து விட்டதால் இனி நடிக்க மாட்டார் என்று கூறிவந்த நிலையில் தற்போது அதுவெல்லாம் பொய் நான் வந்து விட்டேன் என்று ரித்திகா கூட அவர் வெளியிட்ட வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+