இடுப்புல கையை வச்சு.. இப்படி பார்த்தா எப்படி.. கண்ணம்மாவிடம் விழுந்த ரசிகர்கள்!
சென்னை: என்னதான் மாடர்ன் உடை உடுத்திக்கொண்டு பலரும் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தாலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரோஷ்னி ஹரிப்ரியன் புடவையில் பின்னிப் பெடலெடுக்கிறார்.
சேலையில் நம்ம ஊரு பொண்ணுங்க வந்து நின்னாலே தனி அழகுதான். அதுவும் ரோஷ்னி மாதிரி எடுப்பாய், தெற்றுப்பல் தெரிய இடுப்பில் கையை ஊன்றி கேஷுவலாக பார்த்தால் மனசு படீர்னு விழாமல் இருக்குமா!
அப்படி ஒரு காந்தப் பார்வையால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார் ரோஷ்னி ஹரிப்ரியன் என்ற கண்ணம்மா!

ஆசை கண்ணம்மா
பொதுவாக பலரும் செல்லமாக யாரையும் அழைக்க வேண்டும் என்றால் கண்ணம்மா என்று அழைப்பார்கள் .ஆனால் ரோஷ்னி ஹரிப்ரியன் அனைவருக்கும் செல்லப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருப்பதால் இவரை அனைவரும் கண்ணம்மா என்று அழைத்து வருகின்றனர் .பாரதியின் கண்ணம்மாவாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் கண்ணமாவாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துவருகிறது .

திறமைக்கு ரசிகர்கள்
இவரின் தனித் திறமையை பார்த்து அசந்து போன ரசிகர்கள் இவருக்காக கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பலரும் அறிந்ததுதான் .இந்த சீரியலை பார்த்து ரசித்தவர்களை விடவும் இதற்கு மீம்ஸ் போட்டு அதனை கலாய்த்தவர்கள்தான் பலர் . ஆனாலும் தற்போது இந்த சீரியலுக்கு பலரும் அடிமையாகி மாறிவிட்டார்கள்.

அழகிய ரோஷ்னி
அதற்கு காரணம் அதில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் . பக்கத்து வீட்டு பொண்ணு போல இருக்கும் இவருடைய முக அழகைப் பார்த்ததும் பிடித்துப் போன ரசிகர்களுக்கு எந்த மேக்கப்பும் இல்லாமல் கருப்பாக இருப்பதும் பேரழகு தான் என கருப்பு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ரசிகர்களின் மனதில் தனி இடத்தில் சிம்ம சொப்பனம் போட்டு அமர்ந்து இருக்கிறார்.

முதலிலேயே முத்திரை
இவர் இந்த சீரியலில் தான் முதன்முதலில் அறிமுகம் ஆகியிருக்கிறார் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது .அந்த அளவிற்கு நடிப்பில் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கும் இவருக்கு இந்த சீரியலுக்கான வாய்ப்பு இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் கிடைத்திருக்கிறது .இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இடையில் கிடைக்கும் நேரத்தில் போட்டோஷூட்டில் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்.

வாய்ப்பு தந்த இன்ஸ்டா
மாடலாக தானே போட்டோஸ் எடுத்து அதனை எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வந்திருக்கிறார் .இவருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்களை விடவும் நாள் போகப்போக ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர் .கண்ணியமான உடையினாலும் அதிக கவர்ச்சி இல்லாத காரணத்தினாலும் கூட ரசிகர்களின் மனதில் தனித்து இருந்து வருகிறார். முதலில் இந்த சீரியலின் கதாநாயகி இவர்தான் என தெரிந்ததும் கூட நடிப்பவர்களும் சூட்டிங் பார்க்க வந்தவர்களும் கூட அதிர்ச்சி அடைந்து வந்திருக்கின்றனர்.

இவரா நடிக்கப் போறார்
இந்த பொண்ணா ஹீரோயினியாக நடிக்க போகிறது என்றுதான் பலரும் கேட்கின்றனர் .அதுவும் இவர் காதுபடவே அவர்கள் பேசியதைக் கேட்டு இவர் மனம் கலங்கி இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய திறமையை நிரூபிப்பதே முதல் வேலை என கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார் .இவரை முதலில் அலட்சியமாக பார்த்தவர்கள் தான் தற்போது இவருடைய வளர்ச்சியை பார்த்து ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இதற்குத்தானே ஆசைப்பட்டார்
இதற்காகத்தானே இவரும் ஆசைப்பட்டார் அவருடைய ஆசைப்படியே எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலை தாண்டியும் இவர் ரொம்பவே அமைதியான பெண்ணாக இருந்திருக்கிறார். அதனால்தான் இந்த சீரியல் டீமுடன் முதலில் செட் ஆவதில் இவருக்கு கொஞ்சம் சிக்கல் இருந்திருக்கிறது. ஆனால் தற்போது நன்றாக பழகி விட்டதால் சூட்டிங் இல்லாத நேரத்தில் அனைவரும் சேர்ந்து லூட்டி அடித்து பல ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

பரீனாவுடன் கலாட்டா
சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரினா இவரை பாடாய் படுத்தி எடுத்துவிடுவார் .ஆனால் அதுவும் ஜாலியாகத்தான் இருக்கிறது என்று இவர் கூறியிருக்கிறார் . ஊரடங்கு காரணமாக சூட்டிங் இல்லாமல் இருந்த இவர்கள் மீண்டும் சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததும் சூட்டிங்கிற்கு கிளம்பி விட்டார்கள் .

சிரிப்பில் விழுந்த ரசிகர்கள்
ஆனாலும் கிடைக்கும் நேரத்தில் ஒரு போட்டோ சூட்டை போட்டு விடலாம் என யோசித்து சிம்பிளாகவே சிரித்தபடி பல போட்டோக்களை எடுத்து விட்டார். பல நடிகைகள் போட்டோ சூட்டில் கலக்கிக் கொண்டு இருந்தாலும் நான் யாரையும் மாதிரி இல்லை என் வழி தனி வழி என்ன கேஷுவலாக இவர் எடுத்த போட்டோக்கள் தான் தற்போது செம வைரலாக இன்ஸ்டாகிராமில் சுற்றிவருகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications