தலைகீழாக ஃபோக்கஸ் காட்டிய சாக்ஷி.. இமைக்க மறந்து போன ரசிகர்கள்!
சென்னை : பெட்டின் மீது கால் மீது கால் போட்டு தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தரிசனத்தை காட்டிய சாக்ஷி அகர்வால் பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து போயிருக்கின்றனர். அவர் தலைகீழாக போஸ் கொடுத்தாலும் கூட தாறுமாறு தக்காளி சோறா இருக்கே என்றும் புல்லரித்துப் போயுள்ளனர் ரசிகர்கள்.
படுக்கை அறையில் செய்கின்ற வேலையா இது!!என்று சிலர் புலம்பினாலும், இதுவும் அழகாகத்தான் இருக்கிறது என்று ரசிக்கத் தவறவில்லை . காரணம் அப்படி ஒரு வித்தியாசமான கோணத்தில் போட்டோ பிடித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
புத்தகத்தைக் கையில் எடுத்தால் தானே தூக்கம் வரும் ஆனால் சாக்ஷி அகர்வாலை இந்த மாதிரி பாத்தா எப்படி தூக்கம் வரும் என புலம்பும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

பெட்டை விட்டு மனசு போக மாட்டேங்குது
பெட்டின் மீது மல்லாந்து படுத்தபடி புத்தகத்தை தலைகுப்புற வைத்துக்கொண்டு தலையை மட்டும் தூக்கி பார்த்து இருக்கும் சாக்ஷியை பார்த்ததும் ரசிகர்கள் வெடவெடத்து போயிருக்கின்றனர். இப்படி ஒரு தரிசனத்தை காலை வேளையில் யாரும் எதிர்பார்க்கவில்லையே என்று புலம்பினாலும், ரசிக்க மட்டும் தவறவில்லை. பல நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு போஸ் கொடுத்ததும் அவருடைய ரசிகர்கள் ஓடோடி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவருடைய லேட்டஸ்ட் போட்டோக்கள் தான் தற்போது வைரலாக வலம் வருகிறது. சும்மாவே சாக்ஷியின் புகழைப் பாடும் ரசிகர்கள் இப்போது கும்மென்றிருக்கும் இந்த போட்டோவை பார்த்ததும் விட்டு வைப்பார்களா!! விதவிதமாக வர்ணித்து விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

இதுவும் நல்லா இருக்கே
யாரைப் பற்றியும் கவலை இல்லாமல் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை தள்ளிவைப்பதை நிறுத்துங்கள்.... இன்று செய்ய வேண்டிய வேலையை உடனே செய்யுங்கள்...பிறகு உங்களுக்கு நீங்களே நன்றி சொல்வீர்கள்.. என்று புது தத்துவத்தை கொடுத்திருக்கும், சாக்ஷி அகர்வால் சூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே வெயிலுக்கு இதமாக அரைகுறை உடையோடு புத்தகத்தை கையில் எடுத்து அடுத்தவர்களை வேலை செய்ய விடாமல் செய்திருக்கிறார். இவருக்கு படிக்கும் அழகை பார்த்த பிறகு பலருக்கும் அந்தப் புத்தகத்தின் மீது ஆசை வந்து விட்டதாம். அதனாலே அது என்ன புத்தகம் என்று பலர் கேட்டு வருகின்றனர். என்னதான் கேட்டாலும், படிப்பதற்காக இல்ல படம் பார்ப்பதற்காக தானே என்று சில நெட்டிசன்கள் கலாய்க்கவும் தவறவில்லை.

பெருசா பெயர் வரவில்லையே
சாக்ஷி அகர்வால் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு பெயர் வாங்கவில்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மனதில் பதிய தொடங்கிவிட்டார். அதற்கு முன்பு இவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்துவிட்டது. அதுவும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமும் உருவாகிவிட்டது. காரணம் இவர் திரைப்படத்தின் மூலம் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் போட்டோ ஷூட்டில் கொடிகட்டி பறந்து வருகிறார். நடிப்பு மட்டும்தான் நடிகைக்கு பெருசு அல்ல, மாடலிங்கும் தான் என்று அதிலும் தன்னுடைய திறமையை நிரூபிக்கலாம் என இவர் கலக்கி வருகிறார்.

அதனால்தான் அழகு கூடி போச்சா
மாடலிங் போட்டோஷூட்டில் பிஸியாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வதிலும் வெறி கொண்ட வேங்கை போலத்தான் செயல்பட்டுவருகிறார். போனவருடம் ஊரடங்கு காலத்தில் வீட்டில் ஃப்ரீயாக இருக்கும்போது டைம் பாஸாக ஆரம்பித்த உடற்பயிற்சி பின்பு இவருக்கு முழு நேரமும் அதில் மூழ்கும்படி மாற்றிவிட்டது. உடற்பயிற்சிக்கு பிறகு இவருடைய உடலும் அழகும் நாளுக்கு நாள் மெருகேறி வருவதை பார்த்து அவருடைய ரசிகர்களும் அவர் செய்த பின் தொடர ஆரம்பித்து விட்டனர். அதனால்தான் சாக்ஷியும் தன்னுடைய ரசிகர்களுக்காக தாம் ஒர்க் அவுட் செய்யும் அழகினையும் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.

அழகு அள்ளுதே
இவர் இதுவரைக்கும் எத்தனையோ விதவிதமான போட்டோஷூட் போட்டோக்களை வெளியிட்டு வந்தாலும் தற்போது கேஷுவலாக இன்று வெளியிட்டுருக்கும் போட்டோவை பார்த்ததும் அசந்து போன ரசிகர்களால் விழி மூட முடியவில்லையாம். அந்த அளவிற்கு சூம் செய்து தன்னுடைய அழகை விருந்து படைத்திருக்கிறார். இவரை இப்படி பார்த்ததும் குஷியான ரசிகர்களால் லைக் பட்டன் தெரித்து ஓடுகிறது .அதுமட்டுமல்லாமல் கமெண்ட்ஸ்களிலும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய அன்பை வெளிகாட்டி வருகின்றனர். யார் என்ன சொன்னாலும் சாக்ஷியின் வெட்கத்திற்கு முன்பு அவருடைய கவர்ச்சி எல்லாம் தூசுதான்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications