ஆர்ஜே ரவி தன்னிடம் என்ன பண்ணுனார் தெரியுமா..?கோபத்தோடு விளக்கம் கொடுத்த சம்யுக்தா
சென்னை: சின்னத்திரை நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பல ரகசியங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சம்யுக்தா காதலித்து தவறாக நடக்க முயற்சி செய்த ஆர்ஜே ரவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அது தன்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டு என்று ஆர்ஜே ரவி நேற்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அன்று என்ன நடந்தது என்பது பற்றி சம்யுக்தா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சின்னதிரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனையில் அடுத்தடுத்து பல ரகசியங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணமான ஒரே மாதத்தில் பல முறை சண்டை போட்டு கருத்து வேறுபாடால் இப்போது பிரிந்து இருக்கின்றனர். அதற்குப் பிறகு சமூக வலைதளத்தில் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டிருந்த நிலையில் தற்போது தன் மீது தவறே இல்லை என்று தனக்கு சம்யுக்தா தான் துரோகம் செய்துவிட்டார் என்று அடுத்தடுத்த சம்யுக்தா பற்றிய ஆடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்.

அந்த வகையில் அந்த ஆடியோவில் சம்யுக்தா இன்னொரு நபரிடம் தான் தன்னோடு நிறைமாத நிறைவே சீரியலில் நடித்த ஆர்ஜே ரவி காதலித்தேன். ஆனால் அவர் என்னிடம் தப்பாக நடக்க முயற்சி செய்தார் என்று பல தகவல்களை அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார். அது சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று சம்யுக்தா தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆர்ஜே ரவி பதில் போஸ்ட் ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் தான் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் என்றும் தான் வீட்டிற்கு ஒரே மகனாக பிறந்து பெண்களின் கஷ்டங்களை அறிந்தவன். அதனால் யாரிடமும் தப்பாக நடக்கவில்லை எனக்கு அதிகமான பெண் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் தப்பாக நடந்து கொண்டிருந்தால் எப்படி என்னிடம் எல்லோரும் பழகுவார்கள் என்று பல கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ரவிக்கு ஆதரவாக ரசிகர் ஒருவர் சம்யுக்தாவிடம் கேள்விகளை கேட்டு இருக்கிறார். அதில், அக்கா ஏன் ரவி அண்ணா மேல தப்பு தப்பா பழி சுமத்துறீங்க. அவங்க அப்படி என்ன துரோகம் உங்களுக்கு பண்ணிட்டாங்க? ரொம்ப கஷ்டமா இருக்கு. ரவி அண்ணா மேல இப்படி எல்லாம் பழி சொல்லாதீங்க. ரவி அண்ணா ரொம்ப ஜெனியூன் மேன். நானும் உங்களோட ஃபேன் தான். ரெண்டு கண்ணுல எந்த கண்ணு வேணும்னு கேட்டா நான் எப்படி சொல்லுவேன்.
நீங்க ரெண்டு பேரும் எனக்கு இம்பார்டன்ட் தான். நீங்க ரவி அண்ணாவை லவ் பண்ணி இருக்கீங்க பட் அவங்க அக்செப்ட் பண்ணலன்னு இப்படி தப்பா சொல்ல கூடாது!? அக்கா ஐ அம் வெரி சேட் என்று பதிவு ஒன்றை வெளியிட அதற்கு சம்யுக்தா ஒரு ரசிகரா உங்களுடைய பீலிங்ஸ் நான் ரெஸ்பெக்ட் பண்ணுறேன்.
நான் அவர் கூட ஒரு வருஷம் டிராவல் பண்ணி இருக்கேன். உங்களுக்கு நாங்க ஆன்ஸ்கிரீன்ல என்ன நாங்க நடிச்சமோ அது மட்டும்தான் தெரியும். உங்களுக்கு அவர் பிடிக்கும் நான் அவருக்கு சப்போர்ட் பண்ணுங்க பட் உண்மை அக்சப்ட் பண்ணி தான் ஆகணும். என்னை அவர் அக்செப்ட் பண்ணல என்கிறதுக்காக நான் அவர் மேல இப்படி பழி சொல்லணும்னு சொல்றதுக்கு ரொம்ப சீப்பா இருக்கு.

உண்மையா அவர் அப்படி பண்ணுனதுனால தான் அடுத்த நாள் நான் என் டியூப் லைட் ஆபிஸ்க்கு போய் இனிமே நான் அவர்கூட நடிக்க மாட்டேன் என்று சொல்லி சேனல் கிட்டையே சண்டை போட்டுட்டு அடுத்த அவர் வீட்டுக்கு போய் அவங்க அம்மா கிட்டேயும் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்துட்டேன். அது எப்படி டா என்னையே நான் அசிங்கப்படுத்தப்பேன். அப்ப கூட நான் இந்த மீடியாக்கு எடுத்துட்டு வரல பட் நான் என் அண்ணன்னு நெனச்சு ஒருத்தர்கிட்ட சொன்னேன்.
அவர் தான் கேவலமா ரெக்கார்ட் பண்ணி விஷ்ணுகாந்துக்கு அனுப்பி, அவர் அதை மீடியால கொடுத்து இப்ப பெரிய நியூஸா போயிட்டு இருக்கு. ஒரு பொண்ணு வெட்கத்தை விட்டு ஓபனா இதை சொல்றத சுச்சுவேஷனுக்கு வந்து இருக்கானா, அவ எவ்ளோ கஷ்டத்துல இருப்பா? அத உங்களுக்கு புரிஞ்சிக்க முடியல. ஆனாலும் ஓகே நான் எந்த பொய்யும் சொல்லல. பொய் சொல்றதுக்கான அவசியமும் எனக்கு கிடையாது என்று பதில் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications