கால் மேல கால்.. அம்சமாக தெரியும் அழகு.. கலக்கும் சரண்யா துரோடி.. கவிதை பாடும் ரசிகர்கள்
சென்னை : தன்னோட அழகு சிரிப்பாலே பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து அழகான நினைவுகளை அசை போட்டு இருக்கும் சரண்யா துரோடியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.
ஒரு காஃபி குடிப்பதற்காக பாண்டிச்சேரி வரைக்கும் போயிருக்கும் இவருக்கு முதிர்ச்சி வந்துவிட்டது என்று ஆர்ப்பரித்து இருக்கிறார்.
சூட்டிங் எதுவும் இல்லாததால் சூடாக காபி குடிப்பதற்கு இவ்வளவு தூரமா போவீங்க என்று வம்பிழுக்கும் நெட்டிசன்கள் வரிசைகட்டி வருகிறார்கள்.

சின்னத்திரை சினேகாவா?
சின்னத்திரை சினேகா சரண்யாவை வைலட் கலர் ஸ்வெட்டரில் பார்த்த அவரது ரசிகர்கள் கோட்டர் அடிக்காமலே வைலண்டாகி அவரது போஸ்ட்டை வைரலாகி வருகின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய ஸ்வெட்டர் போட்ட போட்டாவிலே அனைவரது வாயையும் ஷட்டர் போட முடியாமல் பிளக்க வைத்துவிட்டார் சரண்யா.இவருடைய போட்டோவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து கமெண்டுகளை போட்டுக்கொண்டிருக்கும் போது, நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு டாக்டராக வலம் வந்து கொண்டிருந்த அதே சரண்யா தானா இது, அப்படியே இருக்கிறாரே வருடங்கள் போனாலும் இவர் அழகு மட்டும் கொஞ்சம்கூட மாறவில்லை என்று கமெண்டுகளை போடும் ரசிகர்கள் இன்னொரு புறம் வந்து விட்டனர். எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவீர்கள் என்று கேள்விகளில் படையெடுக்கும் ரசிகர்களும் நாங்களும் வருகிறோம் என்று ஓடி வருகிறார்கள்.

எல்லார் மனதிலும் நிறைந்து விட்டார்
பொதுவாக ஒரு காலத்தில் சீரியல்கள் என்றாலே அது பெண்களுக்கான நிகழ்ச்சி என்று ஆண்களால் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் ,அப்பொழுது ஒரு சில சேனல்கள் ஒளிபரப்பிய டப்பிங் சீரியல்கள் ஆண் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றன அதற்கு காரணம் அந்த சீரியல்களில் சும்மா நச் சென்று வந்த கதாநாயகிலே ஆகும். அதுவரை நம் தமிழ் சீரியல்களில் எடுத்து சொருகிய சேலையும், எண்ணெய் வடியும் முகமாகவே கதாபாத்திரங்களை காட்டி வந்த நிலையில் விஜய் டிவியில் ஒரு சீரியல் புரட்சி போன்று அழகான கதாநாயகிகளை சீரியலில் களமிறக்கியது.

வசீகரிக்கும் அழகு இருக்கு
சின்னத்திரையில் அவ்வாறு புது முயற்சியாக பெரிய திரை போன்றே கதை அம்சங்களையும் கதாநாயகி களையும் கொண்டுவர முயற்சித்த காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த சரண்யாவை சீரியல் கதாநாயகியாகவும் களமிறக்கியது விஜய் டிவி.பேசிக்கவே சென்னை பொன்னான சரண்யா பார்ப்பதற்கும் அந்த நேரத்தில் பட்டையை கிளப்பிய கதாநாயகி சினேகாவை போலவே இருந்ததால் தன்னுடைய நடிப்பால் மட்டுமல்லாமல் தன்னுடைய அழகாலும் பெண் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் எளிதில் கவர்ந்து இழுத்தார். தொடர்ந்து பல சீரியல்களில் வந்து அனைவரது மனங்களிலும் தனது அழகான முகத்தையும் பெயரையும் பதிய வைத்துவிட்டார்

ஹார்ட்டின்கள் பறக்குது
டிராவல் பண்ணுவதை ஹாபியாக கொண்டுள்ள சரண்யா அவ்வப்போது எங்காவது சென்று அதை போட்டோ எடுத்து அப்லோடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதை போன்றே தற்பொழுது ஜில் கிளைமேட்க்கு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார் போல, போகிற வழியில் குளிருக்கு போட்ட ஸ்வட்டர் உடன் ஒரு போட்டோவை போட்டு அனைவரையும் சூடு ஏற்றி விட்டார்.எந்தவித மேக்கப்பும் இன்றி ஸ்வெட்டர் மட்டும் மேலே போட்டுக்கொண்டு சிறிய ஸ்கட்டுடன் சிம்பிளாக இவர் இருக்கும் போஸை பார்த்து அவரது ஸ்வெட்டர் கலருக்கே இவரது ரசிகர்கள் ஹார்டின் களையும் லைக்குகளையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.

காபி குடிப்பதற்கு இவ்வளவு தூரமா?
போட்டோகிராபியை தனது மற்றொரு ஃபேஷனாக நிணைத்து செய்து வரும் சரண்யா,தான் பயணம் செய்யும் இடங்களிலெல்லாம் அவரை மட்டுமல்ல அவரை சுற்றி நடப்பவைகளை அவ்வப்போது போட்டோ எடுத்து தன்னுடைய கலெக்சனாக ஆக வைத்து வருகிறாராம். அதேபோன்றுதான் தற்பொழுது சூடான காபி கோப்பையுடன் சும்மா சொக்கவைக்கும் பார்வையில் கொடுத்துள்ள இந்த போட்டோவை அவருடைய ரசிகர்கள் தங்களுடைய கலெக்சனில் சேகரித்து வைத்து வருகிறார்களாம்.டிராவல் விரும்பியான இவர் எப்பொழுதாவது தங்களுடைய ஊரு பக்கம் வந்தாள் தகவல் சொல்லுங்கள் என்று இவருடைய ரசிகர்கள் இவருக்கு அன்புக் கட்டளையும் இட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications