SaReGaMaPa: முருகன் செய்த அற்புதம்! சரிகமப நிகழ்ச்சியில் நடந்த உருக்கமான சம்பவம்! பிரிந்த குடும்பம் சேர்ந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மனிதனின் நேர்மையான எண்ணம், பல குடும்பங்களை இணைக்கும் பாலமாக அமையும் என்பதற்கு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர் ஹரிஷ், தான் செய்த ஒரு சிறிய உதவி மூலம், நான்கு மாதங்களாகப் பிரிந்திருந்த ஒரு குடும்பத்தை மீண்டும் இணைத்துள்ளார். இந்தச் சம்பவம், பார்ப்பவர்களைக் கண்கலங்க வைத்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

SaReGaMaPa Zee Tamil

பக்தி ரவுண்டு - ஒரு எதிர்பாராத திருப்பம்

சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் 'பக்தி ரவுண்டு' ஒளிபரப்பானபோது, போட்டியாளர் ஹரிஷ் ஒரு முருகன் பாடலைப் பாடினார். அந்தப் பாடலுக்காக, அவர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, அங்கு இருந்த ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார். அப்போது எடுத்த வீடியோ, நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அந்த வீடியோவில், ஹரிஷ் ஒரு வயதான பெண்ணுக்கு உணவு வழங்குவது பதிவாகியிருந்தது.

இந்த வீடியோவை வெளிநாட்டில் இருந்த ஒரு பெண் பார்த்திருக்கிறார். அந்தப் பெண், தொலைந்துபோன தன்னுடைய அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டார். நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது குடும்பத்துடன் ஏற்பட்ட ஒரு சண்டையில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் அந்தப் பெண்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் காணாமல் போனால், உறவுகளின் நிலை சொல்ல முடியாத துயரம். ஒவ்வொரு நாளும், "எங்கு சென்றாரோ, எப்படி இருக்கிறாரோ, ஒரு வேளைக்குச் சாப்பிட்டாரோ இல்லையோ" என்று எண்ணி எண்ணி, உடல்நலமும், மனநலமும் குன்றியிருக்கலாம். அந்த வலியை அந்த வெளிநாட்டுப் பெண்ணின் குடும்பம் அனுபவித்திருக்கிறது.

SaReGaMaPa Zee Tamil

கண்கலங்க வைத்த இணைப்பு

வீடியோவைப் பார்த்த அந்தப் பெண் உடனடியாக ஹரிஷுக்குத் தொடர்பு கொண்டு, "அந்த வீடியோவில் இருந்தவர் என்னுடைய அம்மா. அவர்களை நேரில் சென்று அழைத்து வந்து எங்களிடம் ஒப்படைக்க முடியுமா?" என்று கண்ணீர் மல்கக் கேட்டுள்ளார். ஹரிஷும் உடனடியாக ஒப்புக்கொண்டு, அதே கோவிலுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் பேசி, அவரைத் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

நிகழ்ச்சியின் மேடையில், காணாமல் போன தாயும், அவரைத் தேடிவந்த மகனும், கணவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டபோது, அந்த உணர்வுபூர்வமான காட்சி அங்கிருந்த அனைவரையும் உருக வைத்துவிட்டது. தாயைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில், அந்த மகன் ஆனந்தக் கண்ணீருடன் ஹரிஷுக்கு நன்றி தெரிவித்தார்.

சரிகமப நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம், வெறும் பாடல் நிகழ்ச்சி என்பதைத் தாண்டி, மனித உறவுகளின் முக்கியத்துவத்தையும், ஒரு சிறிய உதவி கூட எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உணர்த்தியுள்ளது. ஹரிஷின் இந்த நற்செயல், பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+