கதறி அழுத நடிகை அபிராமி.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. அம்மா மகன் தவிப்பு..கலங்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா லிட்டில் சாம்பியன் சீசன் 3 நிகழ்ச்சியில் நடுவராக நடிகை அபிராமி கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பாடிய ஒரு சிறுவன் பாடிய பாடலை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த சிறுவன் சொன்ன கதையை கேட்டு நடிகை அபிராமி கண்கலங்கி அழுது இருக்கிறார்.

SaReGaMaPa Little Champion Season 3promo Actress Abhirami cried

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் தன்னுடைய தாயின் ஆசையை நிறைவேற்ற மகன் செய்த செயல் பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.

அம்மாவின் அன்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், பல குழந்தைகள் தங்களுடைய அம்மா அப்பா மீது வைத்திருக்கும் பாசமும் பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய செய்து கொண்டு தான் இருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சியில் ஒரு நெருடலான காட்சி நிகழ்ந்திருக்கிறது.

SaReGaMaPa Little Champion Season 3promo Actress Abhirami cried

பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பிஐ கூட்டுவதற்காக பல சுவாரசியமான நிகழ்வுகளை காட்டிக் கொண்டிருப்பினர். சிலர் ஜாலியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வருவார்கள். ஒரு சிலர் அழுகாச்சி சீன்களை காட்டி அனுதாபத்தை பெற முயற்சி செய்கிறார்கள். எப்படியோ டிஆர்பி அதிகரித்தால் போதும் என்று சில சேனல்கள் நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது. காரணம் சமீபத்தில் முடிவடைந்த சரிகமபா நிகழ்ச்சியை தொடர்ந்து குழந்தைகளுக்கான லிட்டில் சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிறுவன்," ஆராரிராரோ தாயே நீ கண்ணுறங்கு" எனும் ராம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை பாடி இருக்கிறார்.

SaReGaMaPa Little Champion Season 3promo Actress Abhirami cried

அந்தப் பாடலில் அத்தனை சோகங்களும் வலிகளும் இருப்பது பார்ப்பவர்களுக்கே தெரியும் நிலையில் இந்த பாடலை பார்த்து நடுவர்கள் இந்த பாடலில் உனக்கு ஏகப்பட்ட வலி இருக்கிறதே என்ன என்று கேட்க? அதற்கு அந்த சிறுவன் அம்மா நான் டிவில வரணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனால் இப்போ அம்மாவால அதை பாக்க முடியல. அம்மா ஆபத்தான நிலையில் தான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்காங்க. அவங்களுக்கு சுயநினைவு இன்னும் வரல என்று கண்கலங்கி அழுகிறார்.

அதைத்தொடர்ந்து அந்த சிறுவன் சொன்ன கதையை கேட்டு அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் அழுது இருக்கின்றனர். அதே நேரத்தில் தொகுப்பாளர் அர்ச்சனா இங்கே இருக்கிற அத்தனை அம்மாக்களும் உனக்கு அம்மாவாக இந்த இடத்தில் இருப்பாங்க என்று கூற மேடையில் இருந்த நடுவர்கள் உட்பட அனைத்து பெண்களும் அந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறுகின்றனர். அப்போது நடிகை அபிராமி கண்கலங்கி அழுதபடியே மேடையில் உன் கூட உங்க அம்மா இருப்பாங்கன்னு நான் முழுசா நம்புறேன் என்று கூறுகிறார்.

SaReGaMaPa Little Champion Season 3promo Actress Abhirami cried

பெற்றால் மட்டும் தான் பிள்ளையா ஒரு குழந்தை கண்கலங்குவதை பார்க்கும் போதே மனதிற்குள் ஏதோ செய்கிறது என்று அதிகமான ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறி அவருடைய அம்மா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும் பலர் தொடர்ச்சியாக ஆசீர்வாதங்களை கொடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+