சரிகமப சீசன் 3யின் வின்னர் யார் தெரியுமா? கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.. பரிசு இத்தனை லட்சமா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப சீசன் 3 கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது.
இதில் டைட்டில் வின்னராக புருஷோத்தமன் தேர்வாகி இருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து முதல் ரன்னராக ராகவர்ஷினி தேர்வாகி இருக்கிறார். அதுபோல இரண்டாவது ரன்னர் அப் ஆக லக்ஷனா தேர்வாகி இருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நேற்றோடு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவராக இருந்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது விஜே அர்ச்சனா தான். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 23 போட்டியாளர்கள் பங்கேற்று கடைசியில் நேற்றைய கிராண்ட் பினாலேவில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. அதன்படி முதல் இடத்தை புருஷோத்தமன் பெற்றிருக்கிறார். அதாவது மக்களின் அதிகமான வாக்குகள் மற்றும் நடுவர்களால் வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இவர் வின்னராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
வின்னராகி ஜெயித்த புருஷோத்தமனுக்கு ரூபாய் பத்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் ரன்னராக ராகவர்ஷினி தேர்வானார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அவரைத் தொடர்ந்து மூன்றாவது இடம் லக்ஷனாவுக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.
அதுபோல டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக நாகார்ஜுன் வரவில்லை என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடகன் என்று விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications