விஜய் தான் எனக்கு பிடிச்ச நடிகர்! ஏன் தெரியுமா? சரிகமப திவினேஷ் சொன்ன காரணம்.. இவருக்கு இப்படி ஒரு ஆசையா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான திவினேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என்று கூறியிருக்கிறார். அதோடு தான் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராக வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார் அதோடு சில சுவாரசியமான சம்பவங்களையும் திவினேஷ் பகிர்ந்திருந்தார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
70ஸ் பாடல்களில் இத்தனை அர்த்தங்களும் இனிமையும் இருக்கிறது என்று இப்போதுள்ள ஜெனரேஷன் குழந்தைகளையும் கூட கேட்க வைத்த குரலுக்கு சொந்தக்காரர் தான் திவினேஷ். இசையமைப்பாளரும் பாடகருமான எம்எஸ் விஸ்வநாதன் உட்பட பல மெல்லிசை நாயகர்களின் இனிமையான பாடல்களை பாடி எல்லோரையும் வியக்க வைத்திருந்தார். அதனாலேயே சரிகமப நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

சரிகமப டைட்டில் வின்னர் திவினேஷ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருடைய பாடலை கேட்டு பாராட்ட தொடங்கி இருந்தனர். ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் இந்த நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் இதுவரைக்கும் நடக்காத ஒரு அதிசயத்தை திவினேஷ் செய்து காட்டியிருந்தார். ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் மக்கள் மனதில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களை பாடினால் தான் எல்லோரும் ரசிப்பார்கள் என்ற கருத்தை மாற்றி பழைய பாடல்கள் மூலம் திவினேஷ் பிரபலமடைந்தார்.
பழைய பாடல்கள்
இவருடைய பாடல்கள் பல தாத்தா பாட்டிகளின் மனதிற்கு மருந்தாக அமைந்ததாக இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்கள். அதுபோல தங்கள் வீட்டில் இப்படி ஒரு பேர குழந்தை இல்லையே என்று பலர் அந்த நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவித்தனர். சரிகமப நிகழ்ச்சியின் மூலம் பலர் வீட்டு செல்ல பிள்ளையாக வலம் வரும் திவினேஷ் இப்போது தொடங்கிய சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் அடிக்கடி வந்து பாடிக் கொண்டிருக்கிறார்.
திவினேஷ் ஆசை
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரென்று கேட்கப்பட்டபோது எனது விஜய் தான் பிடிக்கும் என்று சொல்லி இருந்தார். அதோடு நீங்க அருமையா பாடுறீங்க, பிற்காலத்தில் சினிமாவில் நடிப்பது போன்ற ஆசை எதுவும் இருக்கிறதா? என்று கேட்டதற்கு கண்டிப்பா இருக்கு. நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ரொம்ப ஆசை. அதுவும் விஜய் உடன் நடித்தால் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். திவினேஷ் அமைதியின் சொரூபமாக சரிகமப மேடையில் பார்த்த ரசிகர்களுக்கு இவருக்குள் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதா? என்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications