Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த இடத்தில் என்னை தொட்டுட்டான்.. இரண்டு லட்சம் பேரும் பேசினாங்க.. பிரபல சீரியல் நடிகை பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி நடிகைகள் பற்றி மக்கள் மத்தியில் இன்னமும் தவறான ஒரு கண்ணோட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் பாலியல் தொந்தரவுகள் இருக்கும் நிலையில் அது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் சின்னத்திரை நடிகை தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஜெயலட்சுமி சீரியல்களில் வில்லியாக நடித்துவரும் நிலையில் தனது சினிமா துறையில் ஏற்பட்ட அவலங்கள் மற்றும் தன்னுடைய தைரியம் குறித்து பேசி பலருக்கும் மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. அதுபோல சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் உறவினர்களாகவும் நண்பர்களாகவும் இருப்பவர்களால் கூட பல நேரங்களில் பெண்களுக்கு ஆபத்து வருகிறது. ஆனால் சினிமாவில் உள்ள நடிகைகள் தங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி விடுகிறார்கள்.

Serial Actress Jayalakshmi openup women sexual harassment in all fields

ஆனால் மற்ற துறையில் உள்ள பெண்கள் சிலர் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்படி பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசாமிகளை பற்றி வெளியே சொன்னால் தான் அவர்கள் கொஞ்சமாக அடங்குவார்கள் என்று ஒரு சிலர் தைரியமாக முன்வந்து பல விஷயங்களை பேசி வருகிறார்கள். அப்படித்தான் ஒரு சீரியல் நடிகை தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலம் அடைந்த நடிகை தான் ஜெயிலட்சுமி.

இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டம் என பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் சினிமா துறையில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அந்த பேட்டியில் மற்ற துறையில் இருப்பவர்களைப் போல சினிமாவிலும் பெண்களுக்கு பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் ஒரு பிரச்சனை நடக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு பிறகு சில வருடங்கள் கழித்தோ அல்லது மாதங்கள் கழித்து ஒரு இயக்குனர் அல்லது நடிகர் என்னை இப்படி செய்து விட்டார் என்று சொல்வது சரியாக இருக்காது. உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால் உடனே அதை தட்டிக் கேளுங்கள்.. அந்த விஷயம் என்னவென்று எல்லோருக்கும் சொல்லுங்கள். அப்போதுதான்
அந்த தப்பை செய்தவர்கள் திரும்ப அடுத்தவர்களிடமும் செய்ய மாட்டார்கள்.

ஒரு முறை நான் பார்க்குக்கு சென்ற போது ஒருவன் என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டுவிட்டான். அதனால் நான் அவனை துரத்தி சென்று செருப்பால் அடித்தேன். அதுபோல சமுதாயத்தில் நடிகைகள் மீது ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. முதலில் அந்த எண்ணத்தை எப்படியாவது மாற்ற வேண்டும். ஒரு முறை எனக்கு வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு மெசேஜ் வந்தது.

அதை தொடர்பு கொண்டு நான் பேசுகையில் அதில் இரண்டு நடிகைகளின் புகைப்படங்களை வைத்து பேரம் பேசினார்கள். அதோடு எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகவும் பேரம் பேசினார்கள் என்று ஜெயலட்சுமி அந்த பேட்டியில் வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+