யானை மிதித்து சாக கிடந்தேன், அப்ப கூட மார்பை பிடித்து சந்தோஷப்பட்டாங்க- நடிகை சந்தியா கண்ணீர் பேட்டி
சென்னை: சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் பூமிகா கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.
அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு தன்னை யானை தாக்கியது குறித்து கண்ணீரோடு பேசி இருக்கிறார்.

பல பெண்களின் வாழ்க்கையில் இந்த மாதிரி தான் வெளியே சொல்ல முடியாத பல அவலங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாகி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் சீரியலில் பூமிகா கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சந்தியா ஜகர்லமுடி இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் சந்திரலேகா போன்ற சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அதிகமான சீரியல்களில் நடிக்காமல் இருக்கும் சந்தியா தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது 2006 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் "செல்லமடி நீ எனக்கு" டைட்டில் பாடல் எடுக்கும் போது கோயில் யானையுடன் சூட் எடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது அது என்னை தாக்கியது.
ஆனாலும் இதுவரை எனக்கு அந்த யானை மீது எந்த கோபமும் இல்லை. அந்த யானை தாக்கியதால் எனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சில பாகங்களையும் அகற்ற நேர்ந்தது. யானை என்னை தாக்கியதும் நான் மயங்கி விட்டேன். உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் தான். யானை என் மீது கால் வைத்தது என்று நினைத்தேன் ஆனால் அது தும்பிக்கையால் என்னை நசுக்கியது.
எனவே என்னால் வலி தாங்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு சிலர் என்னை தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருமே டான்ஸர்கள் தான். அதில் ஒரு தயாரிப்பாளரும் இருந்தார். ஆனால் அவர் இப்போது இல்லை இறந்து விட்டார். அப்போது என்னை தூக்கிக் கொண்டு போன டான்ஸர்களில் ஒருவன், நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு உதவி செய்வது போல நடித்து என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தார்.

என் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் அதை தான் நான் சொல்வேன். அந்த நேரத்துல நான் கிட்டத்தட்ட பிணம் மாதிரி தான் இருந்தேன். பிணத்தை கூடவா இப்படி செய்வாங்க. என்னை தூக்கி செல்லும்போது என் மார்பில் கை வைத்த அந்த டான்சர் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை நான் உணர்ந்தேன்.
அதை இதுவரைக்கும் எங்க அம்மா கிட்ட கூட நான் சொல்லவில்லை. அந்த நேரத்தில் நான் இருந்த நிலைமையை பார்த்து என்னுடைய அம்மா மனம் உடைந்து போயிருந்தார். அவரிடம் இதை எப்படி சொல்வது. அவங்களுக்கு அப்போ தமிழ் கூட தெரியாது. அந்த நேரத்தில் கும்பகோணத்தில் நான் ரொம்பவே தவித்துப் போனேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு என்று கண்ணீரோடு பேசி இருக்கிறார்.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications