Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா உடல்நிலை சரியில்லாமல் போன காரணம் இதுதான்! கூட இருந்தவங்களே செய்த துரோகம்! விஜயகாந்த் மகன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகாந்த் பற்றி அவருடைய மகன் சண்முக பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் அவருடன் இருந்தவர்கள் செய்த துரோகம் தான், அதற்குப் பிறகு அப்பா உடைந்து போய்விட்டார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் மற்றும் தேமுதிக கட்சி தலைவராக இருந்த விஜயகாந்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தன்னுடைய தனித்துவத்தால் இப்போதும் நிலைத்திருக்கிறார். விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார்.

Shanmuga Pandian Vijayakanth

அதற்கு சில வருடங்களுக்கு முன்பே உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சிங்கம் போல இருந்த விஜயகாந்த் பிறகு வீழ்சேரில் எழுந்து நடக்க முடியாத, அளவில் பார்த்தது ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அனைவரும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் காலமாகி போனார்.

அவருடைய இறுப்பின் போது ஒட்டுமொத்த தமிழகமும் வருத்தத்தை தெரிவித்து வந்தனர். அவருடைய இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இப்போதும் அவர் மீது வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த்க்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் இருக்கிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் இருக்கிறார். சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சண்முக பாண்டியன் ஒரு பேட்டியில் பேசும்போது, தன்னுடைய தந்தையை உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் அவருடன் இருந்த நண்பர்கள் அவருக்கு கொடுத்த ஏமாற்றம்தான். அவர்கள் சிலர் அப்பாவை விட்டு விலக தொடங்கி விட்டார்கள். அதற்கு பிறகு அப்பாவிற்கு ரொம்பவும் மனதளவில் வருத்தம் இருந்தது. ஆனால் அதை யாரிடமும் அவர் ஷேர் பண்ணவே இல்லை. அது கூட அவருடைய உடல்நிலை மோசமாக போனதற்கு காரணம் என்று சொல்லலாம்.

அதுபோல அப்பா எல்லோருக்குமே கொடுத்துதான் பழக்கப்பட்டவர் என்று சொல்வார்கள், அதற்கு முக்கிய காரணம் அம்மாவும் என்று பலருக்கு தெரியாது. ஒருவர் தான் சம்பாத்தியத்தை கஷ்டப்படுற இன்னொருவருக்கு கொடுக்கும்போது அவருடைய வீட்டில் இருந்தும் சப்போர்ட் கிடைத்தால் தான் கொடுக்க முடியும். இல்லை நமக்கு செலவு இருக்கிறது நம்முடைய குடும்பத்திற்கு வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்டால் உதவி செய்பவர்களால் கொடுக்க முடியுமா?

அதுபோல என்னுடைய அம்மா என்னுடைய அப்பாவுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்தாங்க. அவங்க எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு சரி என்று சொன்னாங்க. யாருக்கு உதவி செய்யும்போது ஏன் செய்யறீங்க என்று அம்மா கேட்டதே கிடையாது. அதனால் தான் அவர் இஷ்டபடியே இருக்க முடிந்தது என்று சண்முக பாண்டியன் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+