அப்பா உடல்நிலை சரியில்லாமல் போன காரணம் இதுதான்! கூட இருந்தவங்களே செய்த துரோகம்! விஜயகாந்த் மகன் உருக்கம்
சென்னை: நடிகர் விஜயகாந்த் பற்றி அவருடைய மகன் சண்முக பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் அவருடன் இருந்தவர்கள் செய்த துரோகம் தான், அதற்குப் பிறகு அப்பா உடைந்து போய்விட்டார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் மற்றும் தேமுதிக கட்சி தலைவராக இருந்த விஜயகாந்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தன்னுடைய தனித்துவத்தால் இப்போதும் நிலைத்திருக்கிறார். விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார்.

அதற்கு சில வருடங்களுக்கு முன்பே உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சிங்கம் போல இருந்த விஜயகாந்த் பிறகு வீழ்சேரில் எழுந்து நடக்க முடியாத, அளவில் பார்த்தது ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அனைவரும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் காலமாகி போனார்.
அவருடைய இறுப்பின் போது ஒட்டுமொத்த தமிழகமும் வருத்தத்தை தெரிவித்து வந்தனர். அவருடைய இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இப்போதும் அவர் மீது வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த்க்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் இருக்கிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் இருக்கிறார். சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சண்முக பாண்டியன் ஒரு பேட்டியில் பேசும்போது, தன்னுடைய தந்தையை உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் அவருடன் இருந்த நண்பர்கள் அவருக்கு கொடுத்த ஏமாற்றம்தான். அவர்கள் சிலர் அப்பாவை விட்டு விலக தொடங்கி விட்டார்கள். அதற்கு பிறகு அப்பாவிற்கு ரொம்பவும் மனதளவில் வருத்தம் இருந்தது. ஆனால் அதை யாரிடமும் அவர் ஷேர் பண்ணவே இல்லை. அது கூட அவருடைய உடல்நிலை மோசமாக போனதற்கு காரணம் என்று சொல்லலாம்.
அதுபோல அப்பா எல்லோருக்குமே கொடுத்துதான் பழக்கப்பட்டவர் என்று சொல்வார்கள், அதற்கு முக்கிய காரணம் அம்மாவும் என்று பலருக்கு தெரியாது. ஒருவர் தான் சம்பாத்தியத்தை கஷ்டப்படுற இன்னொருவருக்கு கொடுக்கும்போது அவருடைய வீட்டில் இருந்தும் சப்போர்ட் கிடைத்தால் தான் கொடுக்க முடியும். இல்லை நமக்கு செலவு இருக்கிறது நம்முடைய குடும்பத்திற்கு வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்டால் உதவி செய்பவர்களால் கொடுக்க முடியுமா?
அதுபோல என்னுடைய அம்மா என்னுடைய அப்பாவுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்தாங்க. அவங்க எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு சரி என்று சொன்னாங்க. யாருக்கு உதவி செய்யும்போது ஏன் செய்யறீங்க என்று அம்மா கேட்டதே கிடையாது. அதனால் தான் அவர் இஷ்டபடியே இருக்க முடிந்தது என்று சண்முக பாண்டியன் பேசியிருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications