விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம்? எனக்கும் அண்ணி வருவார்! சண்முகபாண்டியன் பூரிப்பு! யார் அவர்?
சென்னை: எனக்கு அண்ணி விரைவில் வருவார் என நடிகர் சண்முகபாண்டியன் தெரிவித்தார். படைத்தலைவன் திரைப்படத்தின் பிரஸ் ஷோவிற்கு பிறகு அவர் இந்த விஷயத்தை தெரிவித்தார். தனது அண்ணன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படைத்தலைவன் திரைப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடந்தது. இந்த விழாவில் ஹீரோ சண்முக பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், எனது அம்மாவை அண்ணியார் என அனைவரும் பாசமாக அழைப்பார்கள்.
எனக்கு அண்ணி விரைவில் வருவார். எனது அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அதற்கான நேரம் விரைவில் வரும் என சண்முகபாண்டியன் தெரிவித்திருந்தார். எத்தனையோ புதுமுகங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த்.
ஆனால் அவருடைய மகன் சண்முகபாண்டியனால் அந்த அளவுக்கு திரைத்துறையில் சாதிக்க முடியவில்லை. அவருக்கான வாய்ப்புகளும் சரியாக வரவில்லை. இந்த நிலையில் படைதலைவன் எனும் படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக உள்ளன. விஜயகாந்தின் ஆக்ரோஷமான சண்டையை சண்முக பாண்டியன் அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
சண்டை காட்சிகளில் அர்ஜுனுக்கு பிறகு சண்கமுபாண்டியன் வருவார் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தில் பொட்டு வச்ச தங்க குடம் என்ற பாடல் வருவது படத்திற்கு சிறப்பை கொடுத்துள்ளது.
இந்த படத்தின் முதல் நாள் ரூ 50 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தெரிகிறது. அது போல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வசூல் சற்று அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தக் லைஃப் படத்தால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் அந்த படத்தை தவிர்த்துவிட்டு படைதலைவன் படத்திற்கு செல்கிறார்கள்.
சுருக்கமாக சொன்னால் அப்பாவின் ஸ்டைலை அப்படியே சண்முகபாண்டியன் கொண்டு வந்திருக்கிறார் என சொல்லலாம். படம் வெளியாகி பாசிட்டிவ் கமென்ட்டுகளை பெற்றுள்ளதால் சண்முகபாண்டியனும் படக்குழுவினருக்கு விருந்து வைத்துள்ளார். அவர்களுக்கு புத்தாடைகளையும் வழங்கியுள்ளார்.
மதுரைவீரன், சகாப்தம் உள்ளிட்ட படங்களில் இருந்து மாறுபட்ட தோற்றத்தில் படைத்தலைவனில் நடித்திருக்கிறார் சண்முகபாண்டியன். படத்தில் விஜயகாந்த் சிஜிஐ காட்சிகளுக்கு விசில் பறக்கிறது. இந்த படத்தின் பிரஸ் ஷோவில்தான் சண்முகபாண்டியன் , அண்ணி குறித்து பேசியுள்ளார்.
விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருன் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கொரோனா , விஜயகாந்தின் உடல்நிலை பிரச்சினைகளால் திருமணம் தள்ளி போனது. இந்த நிலையில்தான் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எனக்கும் ஒரு அண்ணி வருவார் என்றும் சண்முகபாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications