நேற்று ரவி மோகன் பற்றி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை.. இன்று கெனிஷா செய்த செயல்.. முடிவுக்கு வரும் பஞ்சாயத்து?
சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ரவி இருவரும் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பாடகி கெனிஷாவை வைத்து பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இன்று கெனிஷா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
பொதுவாக பிரபலங்கள் வீட்டு பிரச்சனைகள் வெளியே தெரியாத வரைக்கும் தான் அவர்கள் பற்றிய மதிப்பு, மரியாதையும் மக்கள் மனதில் இருக்கிறது. அதே நேரத்தில் அவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியே தெரிய ஆரம்பிக்கும் போது அவர்கள் பற்றி தேவையில்லாத பிம்பங்களும் உருவாக்குகிறது. ஆனால் நாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக அந்த பிரபலங்கள் தொடர்ந்து தங்களை நிரூபிக்க ஏதாவது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் நடிகர் ரவி மோகனின் குடும்பப் பிரச்சனையும் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

விவாகரத்து அறிவிப்பு
கடந்த வருடத்தில் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிய போவதாக அறிவித்திருந்தார். பிறகு இருவருடைய விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ரவி மோகன் இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் எந்த நடிகைகளுடனும் கிசுகிசுவில் சிக்காதவர் ஆனால் பாடகி கெனிஷாவுடன் நெருங்கி பழகி வருகிறார், அதனால்தான் மனைவியை பிரிகிறார் என்ற வதந்திகளும் பரவி வந்தது. இதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
ஆர்த்தி அறிக்கை
ஆனால் கடந்த வாரத்தில் இருவரும் ஒரு திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டனர். அதற்குப் பிறகு மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபமாக வெடிக்க தொடங்கியது. கெனிஷா மற்றும் ஜெயம் ரவியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ஆர்த்தி ரவி நான் இப்போதும் ஜெயம் ரவியின் மனைவிதான், என்னுடைய குழந்தைகளுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரவி மோகன் அறிக்கை
அதை தொடர்ந்து ரவி மோகன் நான்கு பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஆர்த்தி ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினரால் தான் முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்படுகிறேன் என்று பேசியிருந்தார். தன்னுடைய குழந்தைகளை பார்க்க விடாமல் தடுக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கெல்லாம் பதில் கொடுத்து நேற்று ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கெனிஷா செய்த செயல்
இதற்கிடையில் கெனிஷா தன்னைப் பற்றியும் ரவி மோகன் பற்றியும் அவர் ஆறுதலாக வரும் பதிவுகளை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவருக்கும் பாடகி சுசித்ரா உட்பட சிலர் சப்போர்ட் செய்து கொண்டு இருந்தனர். அந்த வீடியோக்களை கெனிஷா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வந்தார். ஆனால் நேற்று ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த எல்லா பதிவுகளையும் ஸ்டோரிகளையும் டெலிட் செய்திருக்கிறார்.

பதில் அறிக்கை
ஏற்கனவே ரவி மோகன் வெளியிட்ட பதிவு என்னுடைய "வாழ்வின் ஒளி" என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு நேற்று ஆர்த்தி வெளியிட்ட பதிவில், "உங்கள் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவரால் தான் எங்களுடைய வாழ்க்கையில் இருள் வந்துவிட்டது" என்று கூறி இருந்தார். அதுபோல "கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்றால் பெற்றோர் வீட்டிற்கு செல்லாமல் எதற்காக நம் குடும்பத்திற்குள் பிரச்சனை வருவதற்கு காரணமாக இருந்த பெண் வீட்டிற்கே போக வேண்டும்" என்று கேள்வி எழுப்பி இருந்தார். நேரடியாக கெனிஷா பற்றி ஆர்த்தி போட்ட பதிவால் இப்போது கெனிஷா இந்த முடிவு எடுத்து இருக்கிறாரா என்ற கேள்விகள் எழுகிறது.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications