Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பத்துல ரொம்ப பந்தா காமிச்சேன்.. ஆனால் இப்போ..! வெளிப்படையாக பேசிய ராஜலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் இசை பாடகியான ராஜலக்ஷ்மி தான் படித்த கல்லூரியில் தன்னை பாடுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்த நிலையில் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது தான் ஆரம்பத்தில் ரொம்ப பந்தா காமித்து அலைந்ததாகவும் ஆனால் இப்போ தன்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என்றும் அதில் ராஜலட்சுமி பேசியிருக்கிறார்.

மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பின்னணிப் பாடகியாகவும் மாறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்திருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளும் தொடங்கியது. அதோடு கதாநாயகியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டார்.

television vijay tv rajalakshmi

ராஜலட்சுமி அவருடைய கணவரும் செந்தில் கணேஷும் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடி கொண்டிருக்கிறார்கள். அதுபோல மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல சமூக வலைதளத்திலும் செந்தில் கணேஷ் மற்றும் அவர்களின் மனைவி ராஜலட்சுமி இருவரும் ஆக்டிவாக இருக்கிறார்கள். அடிக்கடி போட்டோ புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை பார்த்து ஒரு சிலர் பாராட்டினாலும் சிலர் நெகட்டிவ் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.

காரணம் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டவர்கள் இவ்வளவு முன்னேறிட்டார்களே என்பதுதான் அந்த கமெண்டில் பலருடைய குமுறலாகவும் இருக்கிறது. ஆனால் தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கமாண்டுகளை அசால்டாக கையாண்டு வரும் ராஜலட்சுமி இன்று தான் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.

அதில் நான் படித்த காந்தி கிராமம் கல்லூரியில் அவார்டு ஃபங்ஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எனக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமாக இருக்கிறோம் ஆனால் நம்ம காலேஜில் ஒருமுறை கூட நம்மை பாட்டு பாட கூப்பிடவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அந்த வருத்தம் எனக்கு இப்போ நிறைவேறி இருக்கிறது.

television vijay tv rajalakshmi

நான் மேடைகளிலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பின்னணிப் பாடகியாகவும் பாடிக் கொண்டிருக்கும் போது ரொம்ப பந்தா பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா இப்போது இயல்பை புரிந்து கொண்டேன். என்னுடைய கல்லூரியில் எனக்கு கிடைத்த வாய்ப்பு பெரியது என்று தான் நான் சொல்வேன். நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டாகத்தான் இருந்தேன்.

ஆனாலும் இந்த கல்லூரியில் ஆசிரியர்கள் கடைசி பெஞ்ச் மாணவர்களையும் கூட தமிழை பற்றி எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அளிக்கும் வகையில் மாற்றி விடுவார்கள். எங்கள் கல்லூரியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் நானும் பாட்டு பாடி இருக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த பெரிய வரம் என்று நான் சொல்வேன் என்று அந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி எமோஷனலாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+