"ரோஜா ரோஜா" மறுபிறவி: பாடகர் சத்யனுக்கு மாரி செல்வராஜ் கொடுத்த வாய்ப்பு! உருக்கமாக அவரே வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு கலைஞனுக்குக் காலம் கொடுக்கும் அங்கீகாரத்தை விட பெரிய பரிசு வேறு எதுவுமில்லை. அந்தப் பரிசு இப்போது பாடகர் சத்யன் மகாலிங்கத்திற்கு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் மூலம் கிடைத்துள்ளது.

Sathyan Mahalingam Mari Selvaraj Dhruv Vikram

ஒரு காலத்தில், ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்தவர் பாடகர் சத்யன் மகாலிங்கம். 2004-ல் கமல்ஹாசன் நடித்த 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில், இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையில், 'கலக்கப் போவது யாரு' பாடலில் கமல்ஹாசனுடன் இணைந்து பாடி, தன் திரைப் பயணத்தைத் தொடங்கினார். யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையிலும் பாடினார். குறிப்பாக, விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தில் அவர் பாடிய 'குட்டிப் புலி கூட்டம்' பாடல், இன்றும் ஹிட் லிஸ்ட்டில் நீங்காமல் உள்ளது.

இணையம் கொடுத்த இரண்டாம் இன்னிங்ஸ்

திரைப்படங்களில் தொடர்ச்சியாக பாட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சத்யனின் குரல் சில காலம் தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்தது. ஆனால், சமீபத்தில் இணையதளங்களில் வைரலான ஒரு வீடியோ, அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. ஒரு இசை நிகழ்ச்சியில், அவர் பாடிய 'ரோஜா ரோஜா' பாடல் இணையத்தை அதிர வைத்தது. உண்மையான பாடகர் உன்னிகிருஷ்ணனே பாடுவது போல் இருந்த அவரது குரலும், அதை அவர் உணர்வுப்பூர்வமாகப் பாடிய விதமும் பலரையும் கவர்ந்தது. அந்தப் பாடல் சத்யனுக்கு இணையதளங்களில் ஒரு பெரும் 'மறுபிறவி'யைத் தந்தது. பல வருட இடைவெளிக்குப் பிறகு, யூடியூப் சேனல்கள் அவரை நேர்காணல் செய்ய, அவருடைய பழைய நினைவுகளும் திறமையும் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது.

பைசன் படத்தின் மூலம் கிடைத்த கனவு வாய்ப்பு

இந்த எதிர்பாராத பிரபலம், சத்யனை மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. சில படங்களையே இயக்கி இருந்தாலும், அழுத்தமான கதைக்களத்தால் முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'பைசன்' படத்தில் பாடும் வாய்ப்பு சத்யன் மகாலிங்கத்திற்கு கிடைத்திருக்கிறது.

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ள, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள 'பைசன்' திரைப்படம், வரும் அக்டோபர் 17-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'தென்னாடு' என்ற பாடலைத்தான் சத்யன் மகாலிங்கம் பாடியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப் பாடல், இணையத்தில் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. "ரோஜா ரோஜா" பாடலைக் கேட்டு வியந்தவர்கள், தற்போது சத்யன் மகாலிங்கத்தின் இந்த புதிய பாடலைக் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு கலைஞனின் உழைப்பும், திறமையும் ஒருபோதும் வீண் போகாது என்பதை சத்யன் மகாலிங்கத்தின் கதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இணையத்தின் மூலம் கிடைத்த வரவேற்பு, இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படைப்பில் அவருக்கு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. காலத்தின் கோட்டைத் தாண்டி, தன் குரலால் மீண்டும் மக்களைக் கட்டிப்போட்டிருக்கும் பாடகர் சத்யன் மகாலிங்கத்தின் இந்த இரண்டாம் இன்னிங்ஸ், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

இதுகுறித்து சத்யன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நன்றி என்ற ஒரு வார்த்தையில் என் உணர்ச்சியை அடக்க முடியாது. இது என் ரொம்ப நாள் பசி. நான் அவ்வளவுதான் இனி சினிமா கிடையாது என்று நினைத்து எனக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு நன்றி. இந்த பாட்டை எனக்கு கொடுத்ததற்கு.. நீங்கள் மனது வைக்கலைன்னா இது எனக்கு கிடைத்து இருக்காது என்று மாரி செல்வராஜ் பற்றி சத்யன் உருக்கமாக பேசி இருக்கிறார்.

பாடகர் சத்யன் மகாலிங்கத்தின் குரல் மேலும் பல படங்களில் ஒலிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+