Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணியின் ஏமாற்று வேலையை கண்டுபிடித்த விஜயா! அண்ணாமலை சொன்ன விஷயம், முத்து எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியும் மீனாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகிறார். ஆனால் ரோகிணி மீண்டும் பொய் சொல்ல விஜயா அவரிடம் வசமாக சிக்குகிறார். அதே நேரத்தில் முத்துவும் முக்கியமான முடிவெடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.

நேற்றைய எபிசோடில் சத்யா தன்னுடைய பாஸ் மகள் ரேகாவை சீதா வேலை பார்க்கும் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருந்தார். அவருக்கு வயிறு வலி என்பதால் டாக்டரிடம் ரேகா பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சீதா சத்யாவிடம் இந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன அவ்வளவு பெரிய நெருக்கமா! என்று கேட்க, அதற்கு சத்யா அப்படியெல்லாம் இல்லை என்னோட பாஸ் மகள் அவ்வளவுதான் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்படியே இருந்தா சரிதான் வேற எதுவும் வச்சிக்காத என்று சீதா அட்வைஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரேகா வந்ததும் கதையை மாற்றி விடுகிறார். மறுபக்கத்தில் முத்து மீனாவின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நண்பர்கள் எல்லாரும் முத்து ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை போட்டால் சரியாகிவிடும் என்று சொல்ல முத்துவும் மாலை அணிந்து மீனா வீட்டிற்கு வருகிறார்.

மீனாவின் அம்மாவிடம் வந்து தான் மாலை போட்டு இருப்பதால் பூஜை வைக்கணும் வீட்டில் வைக்க எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க அதனால கார் ஸ்டாண்டில் பூஜை போட போறேன் என்று சொன்னதும், அவங்க நம்ம வீட்டிலேயே வச்சிருக்கலாமே என்று சொல்ல, வேண்டாம் நான் ஸ்டாண்டில் வைத்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கண்டிப்பாக வரணும் என்று சொல்கிறார். கூடவே மீனாவையும் கூட்டிக்கொண்டு வருமாறு ஜாடை மாடையாக சொல்லிவிட்டு போகிறார்.

பிறகு மீனாவை பார்க்க அவருடைய வீட்டிற்கு அண்ணாமலை வருகிறார். அவர் மீனாவிடம் நீ முத்து குடித்திருக்கிறான் என்பதற்காக மட்டுமே வரல. பின்னணியில் வேற ஏதோ காரணம் இருக்கு என்னவென்று துருவி துருவி கேட்க அதற்கு மீனா அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா அவரு குடிச்சாரு என்பதற்காக மட்டும்தான் நான் வந்தேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க, சரி அவன் குடித்தான் என்பதற்காக வந்த சரி ஆனா இப்போ அவன் மாலை போட்டு திருந்திட்டான். அதனால மீண்டும் வீட்டுக்கு வந்துரு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அவரிடம் உண்மையை சொல்ல முடியவில்லை என்று மீனா வருத்தத்தில் இருக்கிறார். அப்போது ரோகிணி மீனாவுக்கு போன் போட்டு பேசுகிறார். அதற்கு ரோகிணியிடம் தன்னுடைய கோபத்தை மீனா காட்டுகிறார். உன்னால என்னுடைய நிம்மதியே போச்சு இப்ப எதுக்கு போன் பண்ண என்று கேட்க நான் உங்களை பார்த்து பேசணும் என்று ஒரு ஹோட்டலுக்கு வர சொல்கிறார்.

மீனாவும் அங்கே போய் ரோகிணியை தீட்டிக் கொண்டிருக்கும் போது, நீங்க உண்மையை உங்க அம்மாவிடம் சொல்லிட்டீங்களா என்று ரோகிணி கேட்க அதற்கு கோபமான மீனா நீ இவ்வளவு சுயநலமா இருப்பியா? என்று திட்டி விட்டு எங்க அம்மாவிடம் இன்னும் சொல்லல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அந்த வழியாக ஆட்டோவில் போன விஜயா இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார்.

இவளுக ரெண்டு பேரும் நமக்கு எதிரா ப்ளான் போடுறாளுகளா என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வருகிறார். பிறகு வீட்டிற்கு வந்த ரோகிணியிடம் எங்க போயிட்டு வர என்று விஜயா கேக்க, ரோகிணி ஏதேதோ கதையை அளந்து விடுகிறார். மீனாவே சந்தித்ததை மட்டும் சொல்லாமல் மறைக்கிறார். இதனால் கோபமான விஜயா எதுக்காக இப்படி பொய் சொல்லிட்டு திரிகிற என்று கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+