சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் வசமா மாட்டிய ரோகிணி! வம்பு இழுக்கும் அருண்! முத்து செய்த செயல்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 28ம் தேதிக்கான எபிசோடில் கோபமாக இருக்கும் மீனாவை சமாதானப்படுத்துவதற்காக முத்து முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் மீனாவும் ரோகிணியும் பேசுவதை பார்த்து விஜயா கோபத்தில் இருக்கும்போது ரோகிணி அவரிடமே பொய் சொல்லி மாட்டிக் கொள்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் உண்மையை தெரிந்த மீனா அதை தன்னுடைய கணவர் முத்துவிடமும் மாமனார் அண்ணாமலையிடமும் சொல்லாமல் மறைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அந்த நேரத்தில் முத்து குடித்துவிட்டு வர அதையே காரணமாக வைத்து சண்டை போட்டு மீனா அம்மா வீட்டிற்கு போய் இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் மீனாவை பார்க்க வேண்டும் என்று ரோகிணி போன் செய்து கூப்பிட்டதால் மீனாவும் ஒரு ஹோட்டலுக்கு போய் இருந்தார். அங்கு உங்க அம்மாவிடம் என்ன பற்றிய உண்மையை சொல்லிட்டீங்களான்னு கேட்ட ரோகிணியை மீனா திட்டி விட்டு வெளியே வந்தார். அப்போது இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை விஜயா பார்த்து கோபத்தில் இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த ரோகிணியிடம் விஜயா எங்க போயிட்டு வர என்று கேட்க, அதற்கு ரோகிணி நான் பார்த்துட்டு வரேன் என்று சமாளிக்கிறார். இதனால் கோபமான விஜயா வேற எங்கேயும் போகலையா? யாரையும் பாக்கலையா? என்று துருவி துருவி கேட்டாலும் ரோகிணி பொய்யே சொல்கிறார். இதனால் நீ மீனாவை பாத்துட்டு வந்ததை நான் பார்த்தேன் என்கிட்டயே பொய் சொல்லுறியா என்று விஜயா கோபப்பட்டு திட்ட அதற்கு நான் கிளைன்ட் பார்ப்பதற்கு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு போனே அங்க மீனா பூ கொடுப்பதற்காக வந்தாங்க என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து போகிறார்.
பிறகு விஜயா இந்த வீட்டில் இருந்து யாரும் என்னை மீனாவை பார்த்து பேசக்கூடாது அப்படி பேசுறது தெரிஞ்சா நான் வேற மாதிரி இருப்பேன்னு மிரட்ட, அதற்கு உங்க கண்டிஷனுக்கு என்னால ஒத்துக்க முடியாது நான் மீனாவை பாக்கணும்னு தோணுச்சுன்னா கண்டிப்பா போய் பார்ப்பேன். உங்களுக்கு வேற மாதிரி ஆகணும்னா இப்பவே மாறிக்குங்க என்று சொல்லி விட்டு கிளம்புகிறார்.
மறுபக்கத்தில் முத்து இளநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வந்த அருண் முத்துவை வம்பு இழுப்பது போல, பேசிக்கொண்டே இருக்க முத்து கோபமாகி அவரை அடிக்க போகிறார் அப்போது செல்வம் சமாதானம் செய்து முத்துவை அனுப்பி வைக்கிறார். அதைத்தொடர்ந்து முத்து பூஜை செய்யும் இடத்தில் இன்னும் வீட்டிலிருந்து யாரும் வரலையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சத்தியா அவருடைய அம்மா மீனா எல்லோரும் அங்கு வருகின்றனர்.
மீனாவை பார்த்ததும் முத்து இளநீர் கொடுக்க, அதற்கு சத்யா, செல்வம் எல்லோரும் கிண்டல் செய்கின்றனர். அப்போதும் மீனா முத்துவை குறை சொல்வது போலவே பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications