சிறகடிக்க ஆசை: கையில் குழந்தை.. முத்து பகிர்ந்த சந்தோஷம்.. விஜயா கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து தான் கையில் ஒரு குழந்தையை வாங்கிய தருணத்தை பற்றி வீட்டில் சொல்ல விஜயா எதிர்பார்க்காத கேள்வியை கேட்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே இன்றைய எபிசோட்டில் ரோகிணி இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் விஷயம் மீனா மற்றும் சீதாவிற்கு தெரிய வந்திருக்கிறது. இதை கேட்டு மீனா அதிர்ச்சியாகி இருக்கிறார். இந்த விஷயத்தை பற்றி மீனா இனி வீட்டில் சொல்லப் போகிறாரா? அல்லது வழக்கம் போல இதையும் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வைக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே ஒருமுறை ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்லி வீட்டில் மீனா வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த முறை ரோகிணிக்கு இது இரண்டாவது குழந்தை என்ற விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைப்பதற்காக தான் அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் முத்துவிடம் ரோகிணி பற்றி சொன்னால் முத்து உண்மைகளை தோண்ட தொடங்குவார்.
ஏற்கனவே ரோகிணியின் மீது முத்துவிற்கு அதிகமான சந்தேகம் இருக்கும் நிலையில் இனி குழந்தை விஷயத்தை வைத்து முத்து உண்மைகளை கண்டுபிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து சவாரிக்கு போயிருந்த நிலையில் அங்கு பிறந்த குழந்தையை முத்துவின் கையில் கொடுத்ததால் அந்த மகிழ்ச்சியை வீட்டில் வந்து பகிர்கிறார்.
அந்த குழந்தையை கையில் வாங்கிய போது அந்த குழந்தை மெல்ல மெல்ல கண் திறந்து என்னை பார்த்தது. அந்த குழந்தைக்கு நெற்றியில் நான் ஒரு முத்தம் கொடுத்தபோது உடம்பில் பால் வாசம் வீசியது அதை என்னால் மறக்க முடியாது.. சந்தோஷமா இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு விஜயா இதையெல்லாம் கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு ஆனா இந்த வீட்டில் ஒரு குழந்தை சத்தம் கேட்கிறதுக்கு இன்னும் வழி இல்லையே என்று கோபப்படுகிறார்.
ஏற்கனவே ரோகிணி மற்றும் மனோஜ் இனிப்பு கொண்டு வந்து விஜயாவிடம் கொடுக்க விஜயா ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். ஆனால் ரோகிணி பிசினஸில் தங்களுக்கு லாபம் கிடைத்ததாக சொல்ல, அதற்கே விஜயா கோபத்தில் இருக்கும் நிலையில் இப்போது முத்து குழந்தை பற்றி சொன்ன வார்த்தையை கேட்டு மேலும் கோபப்படுகிறார்.
அதே நேரத்தில் விஜயா கோபப்படுவதை பார்க்கும் போது அடுத்ததாக இந்த வீட்டில் மூன்று பேரில் யாராவது ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications