சிறகடிக்க ஆசை: விஜயாவிற்கு அதிர்ச்சி.. நறுக்குனு முத்து கேட்ட கேள்வி.. இந்த அசிங்கம் தேவையா மனோஜ்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் வாங்கிய புது வீட்டிற்கு நியூமராலஜிஸ்ட் வந்து பெயர் வைக்கிறார். அப்போது முத்து கேட்ட கேள்வியால் விஜயா கோபப்படுகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் வாங்கிய புது வீட்டில் விஜயா மீனாவை வேலை வாங்குகிறார். அதோடு ரோகிணியை உயர்வாக பேசி மீனாவை தரக்குறைவாக பேசுகிறார். அதை தொடர்ந்து வீட்டிற்கு பெயர் வைக்க நியூமராலஜிஸ்ட் வராரு என்று சொல்ல, முத்து அதான் உனக்கு பெயர் வச்சாச்சே இப்போ எதுக்குடா புதுசா பெயர் வைக்க போற என்று நக்கல் செய்கிறார்.

விஜயா இதுக்கு தான் படிச்சிருக்கணும் படிக்காதவர்களுக்கு இதை பத்தி எல்லாம் எங்க தெரியும் என்று திட்ட, அதற்கு மீனா முத்துவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். அடுத்ததாக நியுமராலஜிஸ்ட் வந்ததும் அவரை வரவேற்கின்றனர். அப்போது விஜயாவின் முகத்தை அவர் உற்றுப் பார்த்து மனோஜ் உடைய பொலிவு எங்கிருந்து வந்ததுன்னு இப்பதான் தெரியுது.
அவங்க அம்மா கிட்ட இருந்து தான் மனோஜ்க்கு இந்த பொலிவு வந்திருக்கிறது என்று சொன்னதும் விஜயா சந்தோஷப்படுகிறார். அதோடு நீ உங்க அம்மாவால தான் இன்னும் பெரிய ஆளாக போற என்று சொல்ல, விஜயா பெருமையாக இருக்கிறார். அடுத்ததாக பெயர் வைக்கப் போகிறார்கள்.
அப்போது முத்து, அன்பு இல்லம் என்று பெயர் வைக்க வேண்டியதுதானே என்று கேட்டதும் வந்த ஆள் கோபப்படுகிறார். பிறகு மனோஜிடம் யார் இவர் என்று கேட்க, என் தம்பி தான் என்று சொல்கிறார். உடனே முத்து என் பேர் எல்லாம் நீங்க மாத்த வேணாம் எங்க அப்பா எனக்கு அழகா முத்துன்னு பெயர் வைத்திருக்கிறார் என்று சொல்ல, அண்ணாமலை ஆமா முத்து தான் என்னுடைய சொத்து என்று சொல்கிறார்.












Click it and Unblock the Notifications