சிறகடிக்க ஆசை: மொத்த குடும்பத்தினரை பயத்தில் நடுங்க வைத்த முத்து.. கடைசியில் தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் வாங்கிய புது வீட்டில் பேய் இருப்பதாக மொத்த குடும்பத்தினரையும் முத்து ஏமாற்றுகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் வீட்டில் பேய் இருக்கா? இல்லையா? என்பதை செக் பண்ணுவதற்காக ஒரு ஹேண்டட் வர சொல்கிறார். அவரை விஜயா வரவேற்க வாசலுக்கு வந்து பார்த்தபோது அவருடைய கெட்டப்பை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
அடுத்ததாக எல்லோரும் பேய் ஓட்டுபவரை பார்த்து பயந்து கொண்டிருக்கும் போது, முத்து இவர் பேய் ஓட்டுபவரா என்று கேட்க, இல்லை இவர் பேய் இருக்கா இல்லையானு கண்டுபிடிக்க போகிறவர் என்று மனோஜ் சொல்கிறார். பேய் கண்டுபிடிக்கும் பெண் வந்ததுல இருந்து வீட்டில் எல்லோரும் பயந்தபடியே இருக்கின்றனர்.

அப்போது அவர் கையில் ஒரு விளக்குடன் வீடு முழுக்க சுத்தி விட்டு வீட்டில் இருக்கும் லைட்டுகளை போட சொல்கிறார். எல்லா லைட்டுஅணைந்து என் கையில வச்சிருக்கிற லைட் மட்டும் தெரிஞ்சா எங்க வீட்டுல பேய் இருக்குனு அர்த்தம் என்று அவர் சொன்னதும் வீட்டில் எல்லோரும் பயத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது அந்தப் பெண் வீட்டில் எல்லா இடத்திலும் கண்ணை மூடி நின்று கொண்டு தியானம் செய்கிறார். அப்போது முத்து வெளியே ஓடி விடுகிறார். அப்போது வீட்டில் உள்ள லைட்டுகள் எல்லாம் விட்டுவிட்டு எரிகிறது. இதெல்லாம் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் பயப்பட உடனே முத்து மெயின் லைட்டை ஆஃப் பண்ணினால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மெயின் ஆப் பண்ணி விடுகிறார்.

இதைத்தொடர்ந்து இந்த வீட்டில் எந்த பேயும் இல்லை என்று அந்தப் பெண் சொல்கிறார். அதற்கு பொய் சொன்னா பேய் பிடிக்குமான்னு ரோகிணியை பார்த்து முத்து கேட்கிறார். அதற்கு அந்த பெண் பொய் சொன்னால் பேய்க்கு பிடிக்காது அப்படி சொல்பவர்கள் மீது ஏறி அமுக்கும் உடலுக்குள் புகுந்து ரணகளம் பண்ணும் என்று பயமுறுத்துகிறார்.












Click it and Unblock the Notifications