சிறகடிக்க ஆசை: ரோகிணியை காப்பாற்றிய முத்து.. அதிர்ச்சி கொடுத்த விஜயா! மீனா மீது விழுந்த பழி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Feb 28 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 28ஆம் தேதி கான இன்றைய எபிசோடில், ரோகிணி போட்டிருந்த பிளானில் சிக்கிக்கொண்ட மனோஜ் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் முழு கதை. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் எபிசோடில் (Siragadikka Aasai serial today episode) ரோகிணி ஹோட்டலுக்கு அழைத்து வந்து ரூமுக்குள் வைத்துவிட்டு, தான் கொடுத்த பேப்பரில் கையெழுத்து போடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறார். வெளியே போக முடியாத நிலையில் மனோஜ் பாத்ரூமுக்குள் சென்று விஜயாவுக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லிவிடுகிறார். விஜயாவும் அவரைத் திட்டி விட்டு, இதை வீட்டில் இருந்த முத்து, மீனா, அண்ணாமலை எல்லாரிடமும் சொல்ல, முத்து - மீனா உடனே அந்த ஹோட்டல் எது என்று கேட்டு கிளம்புகிறார்கள்.
ரோகிணியின் கண்டிஷன்
இதற்குள் ரோகிணி, "உங்க அம்மாவுக்கு போன் பண்ணி இங்க வர வேண்டாம் என்று சொல்லு... இல்லன்னா இப்பவே நான் தூக்கில் தொங்கிடுவேன்" என்று மீண்டும் பிளாக்மெயில் செய்கிறார். அவர் சொல்லியபடியே மனோஜ் விஜயாவுக்கு போன் செய்து வர வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் அவன் பேசும் விதத்திலேயே ஏதோ சரியில்லை என்று முத்துவுக்கும் மீனாவுக்கும் புரிந்து, அவர்கள் ஹோட்டலுக்கு போகின்றனர்.
அதன்பிறகு ரோகிணி, "நாம் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம்" என்று எழுதியுள்ள பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார். மனோஜ் அதற்கு முடியாது என்று மறுக்கிறார். உடனே தூக்கில் போகிறேன் என்று நாடகம் ஆரம்பிக்கிறார்.

முத்து செய்த செயல்
அந்த நேரத்தில் ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. ரோகிணி கதவை திறக்க முடியாது நான் சாகப் போறேன் என்று மிரட்டிக்கொண்டிருக்கும் போது கிரிஷ் அம்மா என்று கூப்பிட, ரோகிணி கதவை திறக்கிறார். வெளியே கிரிஷ் மட்டும் நின்றிருக்கிறார். அடுத்த நிமிஷம் முத்து, மீனா உள்ளே வந்துவிடுகிறார்கள். மனோஜை பார்த்ததும் செம திட்டு வாங்குகிறார். ரோகிணியையும் இப்படிப்பட்ட சீப்பான வேலைகள் செய்யாதே என்று திட்டிவிட்டு, மனோஜை அங்கிருந்து அழைத்து செல்கிறார் முத்து.
மீனாவை குறை சொன்ன விஜயா
வீட்டில், மனோஜ் ஒருவேளை கையெழுத்து போட்டுட்டானோ என்று விஜயா பதறிக் கொண்டிருக்கிறார். அதற்குள் முத்து, மீனா மனோஜை வீட்டுக்கு கொண்டு வருகிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் மனோஜை திட்டுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் இந்த பிரச்சனைக்கு காரணம் மீனா தான்... அவள் இந்த வீட்டில் இருக்கிறதால்தான் இப்படி நடக்குது என்று மீனாவை குறை சொல்லுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications