சிறகடிக்க ஆசை அப்டேட்: விஜயாவை கலங்க வைத்த ரோகிணி.. மீனாவிடம் போட்ட சபதம்.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 20ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜும் ரோகிணியும் கவுன்சிலிங் போகின்றனர். அப்போது எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது. அதனால் மனோஜ்க்கு புதிய பிரச்சனை வருகிறது. ஆனால் விஜயா ரோகிணிக்கு எதிராக அடுத்த ஆயுதத்தை எடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், கவுன்சிலிங் நடக்கும் ரூமுக்குள் மனோஜ், ரோகிணி இருவரும் செல்கிறார்கள். அப்போது அங்கு வந்த விஜயா, முத்து மற்றும் மீனாவை வெளியே போக சொல்லிவிட்டு, அவர்கள் இருவரிடம் மட்டும் பேசுகிறார். என்ன பிரச்சனை என கேட்கும் போது, ரோகிணி தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயம் தனக்கு டைவர்ஸ் வேண்டும் எனவும் மனோஜ் கூறுகிறார்.
ரோகிணியின் நாடகம்
அப்போது அருகில் இருந்த ரோகிணி அழத் தொடங்க, அதைப் பார்த்த மனோஜ், இதெல்லாம் நம்பாதீங்க, அவ்வளவும் நடிப்பு என சொல்லிக் கொண்டிருக்க, ரோகிணி திடீரென மனோஜ் காலில் விழுகிறார். பின்னர் கவுன்சிலிங் பேச வந்தவர்களிடம் ரோகிணி, நான் சாகுற வரைக்கும் மனோஜுடைய மனைவியாக தான் இருப்பேன், நான் அவர்கூட வாழ வேண்டும், எங்களுக்கு டைவர்ஸ் வேண்டாம் என விடாப்பிடியாக கூறுகிறார்.
மனோஜ் சொன்ன விஷயம்
அதற்கு மனோஜ், இவளால என்னோட நிம்மதியே போச்சு, என்னோட குடும்பத்திலும் நிறைய பிரச்சனை வந்திருச்சு, அதனால இவகூட என்னால வாழ முடியாது என சொல்கிறார். இருவரும் எதிர்மறையான முடிவில் இருப்பதால் கவுன்சிலிங் நடத்துபவர்கள் கன்பியூஸ் ஆகி, இதுக்குமேல எங்களால உங்களை பேசி சேர்த்துவைக்க முடியாது, இனிமேல் கோர்ட் என்ன முடிவு சொல்லுதோ அதை ஏத்துக் கோங்க என கூறிவிடுகின்றனர்.
கவுன்சிலிங்கில் நடந்த சம்பவம்
பின்னர் வெளியே வந்த மனோஜ், உள்ளே நடந்ததை விஜயாவிடம் சொல்கிறார். ரோகிணி அழுது சிம்பதி கிரியேட் பண்ணியதால் கோர்ட்டில் பார்த்துக்க சொல்லிட்டாங்க என கூறுகிறார். அப்போது அங்கு வந்த ரோகிணியிடம், மீனா பேசும் போது, நீ இப்படி அழுகாச்சியாக முகத்தை வச்சிருக்கும்போதே நினைச்சேன் ஏதாச்சும் டிராமா பண்ணுவேனு என சொல்ல, அதற்கு ரோகிணி, என்னை என்னுடைய புருஷன் கிட்ட இருந்து பிரிக்க நினைச்சா இப்படி தான் பண்ணுவேன் என்று திமிராக பேசுகிறார்.
ரோகிணி போட்ட சபதம்
பின்னர் விஜயா, ஏண்டி என் பையன் பின்னாடி வேதாளம் மாறி சுத்திகிட்டே இருக்க என கேட்க, ரோகிணி, நான் டைவர்ஸ் கொடுக்கவே மாட்டேன் என திமிராக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்ததாக வீட்டுக்கு வந்த விஜயா, கோர்ட்டில் நடந்ததை அண்ணாமலையிடம் சொல்லி புலம்புகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அதற்கு அவர், நீ முதலில் மனோஜுக்கு பெண் பார்ப்பதை நிறுத்து, அது தான் ரோகிணிக்கு கோபம், அதனாலதான் அவ இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா என சொல்லுகிறார். ஆனால் விஜயா, அவளுக்கு பயந்து என்னால இருக்க முடியாது என கூறி, மனோஜிடம் புதுசா பார்த்த பெண்ணோடு நீ பேசி பழகு, அதைப் பார்த்து அந்த ரோகிணி வயிறு எரியட்டும் என சொல்லுகிறார். அதற்கு மனோஜும் ஒப்புக்கொள்கிறார். அந்த நேரத்தில் முத்து, மீனாவிடம் இருந்து சாப்பாடு வாங்கி வர, விஜயா தவிர மற்றவர்கள் எல்லோரும் சாப்பிட செல்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?













Click it and Unblock the Notifications