சிறகடிக்க ஆசை: விஜயா, மனோஜை பெல்டால் விளாசிய மீனா.. ரவியின் மனமாற்றம்.. இப்படி பண்ணிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனா, மனோஜ், ரோகிணி, விஜயாவை பெல்டால் அடித்து விளாசி இருக்கிறார். ஆனால் கடைசியில் அது கனவாக இருக்கிறது. அதுபோல வீட்டை விட்டுப் போன ஸ்ருதியை ரவி சமாதானம் செய்திருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் மீனாவிடம் அதிகாரமாக பேசிக் கொண்டிருக்க கோபமான மீனா நேராக ரூமுக்கு சென்று அங்கிருக்கும் பெல்ட்டை எடுத்து வந்து மனோஜ் மற்றும் விஜயாவை போட்டு அடிக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி வருகிறார் அவரும் எதுக்காக மனோஜை போட்டு அடிக்கிறீங்க என்று மீனாவிடம் வாக்குவாதம் செய்ய ரோகிணியையும் அடித்து உன் புருஷனுக்கு தேவைன்னா நீ சமைச்சு கொடு.

என்னை எதற்காக சமைக்க சொல்லி உன் புருஷன் அதிகாரம் பண்ணுறான் என்று திட்டுகிறார். ரோகிணி, மனோஜ், விஜயா என எல்லோரும் முட்டி போட்டு மன்னிப்பு கேட்கின்றனர். இதையெல்லாம் நீங்கள் நிஜம் என்று நம்பிக் கொண்டிருந்தால் அது தான் இல்லை. கடைசியில் மீனா கனவு கண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்து விடுவதால் இதுவும் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சி தான் கிடைத்தது.

கடைசியில் தான் கண்ட கனவில் விஜயா, ரோகிணி, மனோஜ் மூவரும் நடந்து கொண்டதை நினைத்து மீனா சிரித்துக்கொண்டே இருக்கிறார். எதற்காக சிரிக்கிறார் என்று தெரியாமல் விஜயாவும், மனோஜும் கோபப்படுகின்றனர். கடைசியின் முத்து வந்து என்னாச்சு எதற்காக சிரிக்கிறாய் என்று கேட்க, தான் கனவு கண்ட விஷயத்தைப் பற்றி மீனா சொல்கிறார். அவரும் இவர்களை வெறுப்பேத்தும் விதமாக சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

இதைப் பார்த்து வெறுப்பானது விஜயாவும், மனோஜும் மட்டுமல்ல ரசிகர்களும் தான். மறுபக்கத்தில் ரவி ஸ்ருதியை சமாதானம் செய்ய வீட்டிற்கு போகிறார். ஆனால் அங்கு ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் ஸ்ருதியை தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்டு மோதிரம் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்து அவரை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

அடுத்ததாக ஷோரூமில் இருக்கும் ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு முத்து போனில் இருக்கும் வீடியோவை எடுக்க வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications