சிறகடிக்க ஆசை: முத்து மீனாவிற்கு சீதா கொடுத்த அதிர்ச்சி.. மனம் மாறும் அருண்? இனி தான் சம்பவமே இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீதா அருணை காதலிக்கும் விஷயம் முத்து மீனாவிற்கு தெரிகிறது. அருணை பார்த்ததும் முத்துவும் மீனாவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து அடுத்து இனி தான் பஞ்சாயத்தே வரப்போகிறது. ஏற்கனவே ரோகிணி சிட்டியிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கி இருக்கிறார். அதையும் விஜயாவிற்கு கொடுத்திருக்கிறார். விஜயாவின் மனதை மாற்றுவதற்காக ரோகிணி எடுத்த முடிவு இனி ரோகிணிக்கு ஆப்பு வைக்க போகிறது என்று தான் தெரிகிறது. சிட்டியிடம் ஒருவர் திருட்டு நகையை கொடுத்திருக்கிறார். அதை குறைந்த பணம் கொடுத்து ரோகிணியும் வாங்கி இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அருணோடு பிரச்சனை

ஆனால் இனி போலீஸ் விசாரணை வரும்போது விஜயாவுக்கு பிரச்சனை வரும், இல்லையென்றால் இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக மீண்டும் அந்த நகையை ரோகிணி திருடுவார். அப்போது விஜயாவால் குடும்பத்தில் பிரச்சினை நடக்கும். ஏற்கனவே விஜயா ரோகிணியை மதிக்காமல் இப்போது திட்டிக் கொண்டே இருக்கிறார். இப்போது எடுத்த முடிவால் மீண்டும் பிரச்சனை தான் வரப்போகிறது.

சீதாவின் காதல்

இது ஒரு பக்கம் இருக்கும் போது முத்துவுக்கும் போலீஸ்காரர் அருணுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. இருவருக்கும் ஈகோ தலை தூக்கி இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் மாட்டி விடுவதற்கும், ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்துவதற்கும் தான் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான்தான் இந்த ஊரிலேயே நேர்மையானவன் என்று சொல்லிக் கொண்டிருந்த அருண் முத்துவை பழிவாங்க அவர் மீது பொய்யான வழக்கு போட்டிருந்தார். கடைசியில் அது அவருக்கு ஆப்பு வைத்திருக்கிறது.

முத்துவுக்கு தெரிந்த உண்மை

அதேபோல ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த சம்பவமும் இப்போது நடந்திருக்கிறது. அதாவது சீதா அருணை காதலிக்கும் விஷயம் முத்துவிற்கும் மீனாவிற்கும் எப்போது தெரியும் என்று எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்காக தான் இப்போது வெளியான ப்ரோமோ மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதில் முத்துவிடம் மீனா, சீதா காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார். அதோடு நாம அந்த நபரிடம் பேசி ஓகே சொன்னாதான் சீதா கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கா என்று சொன்னதும் முத்துவும் சரி என்று கிளம்பி போகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ

எல்லோரும் கோவிலில் சந்திக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அப்போது அருண் மற்றும் சீதாவை பார்த்ததும் முத்துவும் மீனாவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இனி செய்த தப்புக்கு அருண் மனம் இறங்கி முத்துவிடம் மன்னிப்பு கேட்பாரா? அல்லது மீண்டும் பிரச்சனை செய்வாரா? என்ற கேள்விகளும் எழுகிறது. ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய அக்கா மாமா பற்றி சீதா பெருமையாக சொல்லி இருக்கிறார். ஆனால் முத்துவை தவறாக புரிந்து கொண்டிருக்கும் அருண் முத்துவை வில்லனாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் நாளைய எபிசோடில் தரமான சம்பவம் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+