சிறகடிக்க ஆசை: மீனாக்காக மனம் மாறிய சத்யா.. மாட்டிக்கொண்ட ரோகிணி.. அதிர்ச்சி கொடுத்த விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவை சிட்டி அடித்துவிட்டார் என்பதை தெரிந்ததும் சத்யா சிட்டியிடம் சண்டை போட்டு மனம் மாறி இருக்கிறார். ஆனால் ரோகிணி சிட்டியிடம் வசமாக சிக்கி கொள்கிறார். அதுபோல விஜயாவின் மனமாற்றத்தை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி ஆகின்றனர்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவின் நிலைமையை நினைத்து அவருடைய அம்மா அழுது கொண்டிருக்கும் போது, அந்த நேரத்தில் வீட்டிற்கு சத்யா வருகிறார் சத்யாவிடம் உன்னால் தான்டா இவ்வளவு பிரச்சனை. ஏற்கனவே உங்க அப்பாவை கொன்னுட்ட, நாங்க உயிரோட இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? என்று அடித்து அழுது கொண்டிருக்க, அதற்கு சத்யா என்னாச்சும்மா என்ன பிரச்சனை கேட்க, நீ சிட்டி கூட சேர்வது தான் பிரச்சனை.

சிகரெட் குடிக்கிற பழக்கம் உனக்கு வந்ததுக்கு காரணம் அந்த சிட்டி தான்னு மீனா அவனை கேட்கப்போனா. அவன் மீனாவை தள்ளிவிட்டு இருக்கான். இப்போ அவளுக்கு அடிபட்டதற்கு ஹாஸ்பிடலில் இருக்கிறா என்று அழுது கொண்டு மீனாவின் அம்மா சீதாவிற்கு ஃபோன் போட்டு வீட்டிற்கு கூப்பிடுவதற்குள் சத்தியா வேகமாக சிட்டியை பார்க்கப் போகிறார்.
சிட்டியிடம் ஏன் இப்படி பண்ணின? எங்க அக்காவ எதுக்கு அடிச்ச? என்று கேட்க எல்லாருக்கும் முன்னாடியும் உங்க அக்கா என்னை மரியாதை இல்லாம பேசினா. அதனாலதான் அடிச்சேன் என்று சொல்ல ஆயிரம் இருந்தாலும் அவங்க என்னோட அக்கா அவங்கதான் என்னை வளர்த்தாங்க. அவங்ககிட்ட வந்து மன்னிப்பு கேளு என்று சொல்ல, நான் என்னுடைய மரியாதையை விட்டுக் கொடுத்துவிட்டு வர முடியாது என்று சிட்டி சொன்னதும் இதோட நம்மளுக்குள் இருந்த பிரண்ட்ஷிப் முடிந்துவிட்டது. இனி நீ என்னை தேடி வராத, நானும் உன்னை தேடி வர மாட்டேன் என்று சத்தியா கோபமாக கிளம்பி விடுகிறார்.

பிறகு மீனாவிற்கு ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொல்கின்றனர். குடிக்க ஏதாவது கொடுங்க என்று சொன்னதும் முத்து ஜூஸ் வாங்க போகிறார். அந்த நேரத்தில் மீனாவின் குடும்பத்தினர் வருகின்றனர். மீனா தலையில் இருக்கும் கட்டை பார்த்து அவருடைய அம்மா சீதா என எல்லோரும் பதறுகின்றனர். அதற்கு மீனா ஒன்னும் இல்லமா என்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது சீதாவும் மீனாவின் அம்மாவும் சத்யாவை அடித்து உன்னால் தான் இத்தனை பிரச்சனையும் என்று சொல்கின்றனர். அதற்கு சத்யா மீனாவிடம் என்னால தாங்க எல்லாருக்கும் பிரச்சனை. இனிமே நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன். நான் அவன் கூட இனி சேர மாட்டேன். இப்ப கூட நேரடியா போய் அவனை திட்டிட்டு தான் வந்து இருக்கேன். அவன் இப்படி பண்ணுவான் என்று நினைக்கல.

நீ எங்களுக்காக பண்ணுனதை நான் மறக்கல என்று அழுது கொண்டு இருக்க குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இதை எல்லாம் முத்து ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வர அண்ணாமலை மீனா தலையில் கட்டு போட்டு இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க, மீனா உண்மையை சொல்ல வந்ததும் அதை தடுத்து இல்லை கீழே விழுந்துட்டா என்று முத்து சமாளிக்கிறார்.
அந்த நேரத்தில் விஜயா வந்து என்ன ஆச்சு ஏன் தலையில் கட்டு போட்டு இருக்க என்று கேட்க வண்டியில் போகும்போது விழுந்துட்டா என்று முத்து சொன்னதும் எப்பவும் பணம் சம்பாதிக்கிறதுலையே இருந்தா இப்படி தான். வாய் மட்டும் பேசுற ஒழுங்கா வண்டி ஓட்ட முடியலையா? என்று கேட்டு இப்போ எப்படி இருக்கு என்று விஜயா அக்கறையா கேட்டதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் நீ சமைக்க வேண்டாம் நானே சமைச்சுகிறேன் என்று விஜயா கிச்சனுக்கு போக அண்ணாமலை இவா எந்த நேரத்தில் எப்படி இருக்கான்னு தெரியலையே என்று சொல்கிறார். பிறகு முத்து மீனாவிற்கு கஞ்சி எடுத்துக்கொண்டு ஊட்டி விடுகிறார். அப்போது நீ எதுக்கு சிட்டியை பார்க்க போன என்று கேட்க, சத்யா கெட்ட பழக்கத்தை கத்துக்கும் போது என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல என்று சொல்ல அதற்கு முத்து நான் அப்போ சொல்லும்போதெல்லாம் உங்களுக்கு தெரியலையா என்று கேட்கிறார்.

பிறகு உன் தலையில் ரத்தத்தை பார்த்ததும் எனக்கு உசுரே போயிடுச்சு என்று முத்து கண்கலங்க மீனாவும் அழுகிறார். இனிமே இப்படி பண்ணாதே என்று முத்து அட்வைஸ் செய்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி சிட்டியை வந்து சந்தித்து அவருடைய பழைய பிஏ தினேஷ் மிரட்டுவதை பற்றி சொல்ல, அதற்கு நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கிறேன் என்றால் நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். உங்க அத்தை நகைகளை திருடிட்டு போனது சத்யா தான். அந்த வீடியோ முத்து ஃபோனில் இருக்கிறது.
அதை நீங்கள் சோசியல் மீடியாவில் போடணும் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கிறார். ரோகினி இப்போது சிட்டி இடம் மாட்டி இருக்கிறார். ஏற்கனவே பிரச்சனை செய்து கொண்டிருந்த சதியாவும் விஜயாவும் இன்று மனம் மாறி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இனி வெளியாகும் போது விஜயா மீண்டும் பழையபடி மீனா குடும்பத்தை பற்றி திட்டுவார். முத்துக்குக்கும் அது பிரச்சினையாகும். இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications